ஆறுமுகா ஆறுமுகா ஆறுமுகா ஓம் ஓம்
ஆறுமுகா ஆறுமுகா ஆறுமுகா ஓம் ஓம்
காதலால் வள்ளி மனம் வென்றவனே ஓம் ஓம்
சூரனை யுத்தம் செய்து கொன்றவனே ஓம் ஓம்
ஆறுபடை வீடு கொண்டு நின்றவனே ஓம் ஓம்
தெய்வானை மணம் புரிந்து கொண்டவனே ஓம் ஓம்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா ஓம் ஓம்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா ஓம் ஓம்
சக்திவேலை திருக்கரத்தில் பிடித்தவனே ஓம் ஓம்
மலைபிளக்க வேலதனை விடுத்தவனே ஓம் ஓம்
நான்முகனை சிறையதனில் அடைத்தவனே ஓம் ஓம்
சிவன்முயல நான்முகனை விடுத்தவனே ஓம் ஓம்
மால்மருகா மால்மருகா மால்மருகா ஓம் ஓம்
மால்மருகா மால்மருகா மால்மருகா ஓம் ஓம்
முக்கண்ணன் நுதல்திறக்க விழுந்தவனே ஓம் ஓம்
பொய்கையதில் மலர்களாறில் பிறந்தவனே ஓம் ஓம்
ஓராறு குழந்தை யாகி தவழ்ந்தவனே ஓம் ஓம்
கார்த்திகை பெண்கள்மடி வளர்ந்தவனே ஓம் ஓம்
சக்திவேலா சக்திவேலா சக்திவேலா ஓம் ஓம்
சக்திவேலா சக்திவேலா சக்திவேலா ஓம் ஓம்
கந்தனாகி சக்திமடி சேர்ந்தவனே ஓம் ஓம்
ஓமதனின் உள்ளர்த்தம் தேர்ந்தவனே ஓம் ஓம்
சிவன்கேட்க ஓம்காரம் விளக்கியவா ஓம் ஓம்
அசுரருக்கு பயம்தந்து கலக்கியவா ஓம் ஓம்
சக்திபாலா சக்திபாலா சக்திபாலா ஓம் ஓம்
சக்திபாலா சக்திபாலா சக்திபாலா ஓம் ஓம்
சிவசக்தி அணைப்பினிலே வளர்ந்தவனே ஓம் ஓம்
சக்திவேலால் க்ரௌஞ்ச மலை பிளந்தவனே ஓம் ஓம்
தெய்வானை எனும் மலரை மணந்தவனே ஓம் ஓம்
குறவள்ளியோடு காதலதில் சிறந்தவனே ஓம் ஓம்
கந்தவேளே கந்தவேளே கந்தவேளே ஓம் ஓம்
கந்தவேளே கந்தவேளே கந்தவேளே ஓம் ஓம்
கணபதியை அன்புடனே அணைப்பவனே ஓம் ஓம்
மனமதனை செயல்களோடு பிணைப்பவனே ஓம் ஓம்
மாலவரின் இந்திரனின் மருமகனே ஓம் ஓம்
பக்தர்குறை போக்குகின்ற திருமகனே ஓம் ஓம்
ஆறுமுகா ஆறுமுகா ஆறுமுகா ஓம் ஓம்
ஆறுமுகா ஆறுமுகா ஆறுமுகா ஓம் ஓம்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா ஓம் ஓம்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா ஓம் ஓம்
மால்மருகா மால்மருகா மால்மருகா ஓம் ஓம்
மால்மருக மால்மருகா மால்மருகா ஓம் ஓம்
சக்திவேலா சக்திவேலா சக்திவேலா ஓம் ஓம்
சக்திவேலா சக்திவேலா சக்திவேலா ஓம் ஓம்
சக்திபாலா சக்திபாலா சக்திபாலா ஓம் ஓம்
சக்திபாலா சக்திபாலா சக்திபாலா ஓம் ஓம்
கந்தவேளே கந்தவேளே கந்தவேளே ஓம் ஓம்
கந்தவேளே கந்தவேளே கந்தவேளே ஓம் ஓம்
0 comments:
Post a Comment