ராம பிரான் இருக்கிறார் ராம பிரான் இருக்கிறார்
என் நெஞ்சத்தின் கூட்டுக்குள் ராம பிரான் இருக்கிறார்
மண் புழுவாய் இருந்தவனை மன்னவனாய் மாற்றவே
என் நெஞ்சத்தின் கூட்டுக்குள் ஒரு முடிவோடு இருக்கிறார்
நான் இடைவிடாது நினைத்ததால் என்னுள்ளே புகுந்தவர்
ராவணனாய் இருந்த என்னை ராமனாக செய்கிறார்
நான் கொண்ட கோபமெல்லாம் அன்பாலே அழிக்கிறார்
கல்லான என் நெஞ்சை கருணையால் கரைக்கிறார்
பண்பற்ற இழிஞன் என் கனவுக்குள் வருகிறார்
தன்னை தரும் ராமர் தன் பண்புகளை தருகிறார்
மூடனாய் இருந்த நான் ஞானியாய் தேரினேன்
கந்தல் துணி இன்று பட்டாடையாய் மாறினேன்
எண்ணற்ற குற்றங்கள் இடைவிடாது செய்தவன்
தன்னைப் பற்றி அளவில்லா ஆணவம் கொண்டவன்
ராமபிரான் கருணையால் நற்பாதையில் நடக்கிறேன்
ஆணவம் அழிந்ததில் குழந்தையாய் கிடக்கிறேன்
மலையனைய என் திமிரும் மணலாக உதிர்ந்ததே
என் மரமண்டை புத்தியும் மலராக மலர்ந்ததே
ஐம்புலனும் ஆசையால் எங்கெங்கோ அலைந்ததே
ஐயனவன் காலடியில் பெட்டிப் பாம்பாக அடங்குதே
நான் என்ற கர்வம் என்னை வாட்டியதை தெரிந்தேன்
யாருக்காய் என்னை அழிப்பதென்று திரிந்தேன்
தகுதியான தலைவன் குண ராமரென்று புரிந்தது
என் அகங்கார பங்கம் அவர் காலடியில் நிகழ்ந்தது
கேள்வி கேட்கும் என் மனதை தன் நீதியால் வென்றவர்
உயர்வு தாழ்வு மனப்பான்மைகளை சமன் செய்து தந்தவர்
வீரத்திற்கும் வன்முறைக்கும் வேற்றுமையை உணர்த்தினார்
காமத்திற்கும் காதலுக்கும் உள்ள தூரங்களை காட்டினார்
தாயென்ற தெய்வமதை வழிபடவும் துவங்கினேன்
தந்தைக் கடன் அடைப்பது முதன்மையென்று துலங்கினேன்
பிறரால் புகழப்படும் வாழ்வல்ல சிறப்பென்று புரிந்தது
பிறருக்கு பயனுள்ள வாழ்வே சிறப்பென்று புரிந்தது
சேவை செய்து சேவை செய்து எனை கரைக்கவும் நினைக்கிறேன்
கடந்த கால கசப்புகளின் சுவடுகளை அழிக்கிறேன்
பக்தியும் சேவையும் உயிர்மூச்சான வாழ்க்கையில்
போற்றுதலும் தூற்றுதலும் ஒரு பொருட்டாக இருக்குமோ?
ஸ்ரீராமபிரான் பாதத்தை எப்போதும் பார்த்திடும்
ஓர் அனுமனாய் வாழவே எப்போதும் விரும்புவேன்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்.
புகைப்படம் எடுத்தவர்: மணிவண்ணன்
7 comments:
//பக்தியும் சேவையும் உயிர்மூச்சான வாழ்க்கையில்
போற்றுதலும் தூற்றுதலும் ஒரு பொருட்டாக இருக்குமோ?//
உண்மைதான் ரமேஷ். உணர்ந்து எழுதிய கவிதை மனதைத் தொட்டது.
புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
Beautiful post! i really liked it.
Avar thiruvadigal-il iruppadhe ore vetri!
Surrender is our greatest victory!
//போற்றுதலோ தூற்றுதலோ ஸ்ரீ ராமரையே சேரும்//
idhu over sir! :))
//தூற்றுதலோ ஸ்ரீ ராமரையே சேரும்//
vendam! avarai yaaravudhu thavaraaga pesinaal naam avanga vaay-ai moodanum!
ippadi neengle avarukku "thootrudhal" serkkadheenga! :((
@Kavinhaya
Nanri. Shri Rama Jeyam. :)
@InLovewithKrishna
Potruthala thootruthalo shri Ramaraiyae serum. Ahaa... Ethanai per ethirpu solli vittargal.
Aanal en 'ego' vai zero vil vaikka ithu thaan uthavukirathu.
en perumaikalal naan thalai kanakkavum virumba villai. en sirumaikalaal naan manam surungavum virumbavillai.
pakthiyil pala paavangal undu. ennutaiyathu, avarai ellaam seibavaraakavum, naan ethuvum seyyaathavanaagavum karuthuthuvathu. ippadi iruppathaal en egovai ennaal zero-vil vaikka mutikirathu. en thavarukal ennutaiyathu ena karuthinaal athuvum ego thaan.
inferiority complex, guilt and false modesty are also burdens caused by and upon the ego. The purpose of devotion is to dissolve ego. naan paavi, naan paavi endral athuvum ego thaan.
This is just a technique. And it helps. I am not changing that. :)
Raamarai matrvargal thootruvatharkum itharkum vithyaasam ullathu. Avragal vaayai ataippom, vegu viraivil. :)
//neengle avarukku "thootrudhal" serkkadheenga!//
avarukku thootruthal sera vaendum ena ninaithaal, avar perumaikalai paada maattaen.
Kadavul mun panivaaka iruppathai vita, nermaiyaai iruppathu romba mukkiyam. :)
தங்கள் பதிவு முழுவதையும் படித்து விட்டேன் நண்பரை, மிகவும் அருமை ஒவ்வொன்றும் படிக்கும் போதே புரிகிறது அணைத்து பதிவுகளும் அனுபவித்து ஆத்மார்த்தமாக எழுதி உள்ளீர்கள், இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஏனன்றால் நானும் அந்த நாராயணனின் தீவிர பக்தன் அவன் நாமத்தை எப்போதும் கூறுபவன், அதில் காணும் இன்பத்தை என்னால் யாரிடமும் விவரிக்க முடியவில்லை, அதை அனுபவித்தால் தான் புரியும் அனால் நீங்கள் அதன் இன்பத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். படிக்கும் போது என்னுள் நான் கண்ட இன்பம் அப்படியை கண்ணாடி போன்று காட்டி உள்ளீர்கள், உங்கள் உள்ளிருந்த இப்படி ஒரு பதிவை வெளிபடுத்திய ராமபிரானுக்கு என் இதயம் கலந்த நன்றி ....
ஓம் நமோ நாராயணாய நமக
மிக்க மகிழ்ச்சி நண்பரே. ஸ்ரீ ராமருக்கு தங்களொடு சேர்ந்து நானும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஸ்ரீ ராம ஜெயம்
ஓம் நமோ நாராயணாய நமக
Post a Comment