அழகின் மனமதன் அறிவில் சூரியன் பண்பில் தூயவன் ராஜாராம்
நன்மை நாயகன் பக்தர்வத்சலன் அன்பில் தாயவன் சீதா ராம்
வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் வானம் என்றும் நனையாது
முடி பெற்றாலும் வனம் சென்றாலும் அவன் முகத்தில் சலனம் தோன்றாது
வெயில் அடித்தாலும் கனல் எரித்தாலும் கடலின் ஆழம் குறையாது
யுகம் சென்றாலும் உலகழிந்தாலும் ராமரின் நற்புகழ் மறையாது
போரில் தென்னவன் வெற்றிக் கொள்பவன் மன்னர் மன்னவன் ராஜா ராம்
அரசில் வல்லவன் வேதம் சொல்பவன் தேவர் காவலன் சீதா ராம்
எவர் சொன்னாலும் என்ன செய்தாலும் ஆறுகள் மலை மேல் ஏறாது
என்ன நேர்ந்தாலும் உயிர் பிரிந்தாலும் அவன் உதடுகள் பொய்மை கூறாது
எவர் அழுதாலும் என்ன தொழுதாலும் சூரியன் இரவில் காயாது
உறவென்றாலும் பகையென்றாலும் அவன் நீதியின் கோள் சாயாது
காரில் நீரவன் கனலில் சூடவன் கண்ணில் ஒளியவன் ராஜா ராம்
மெய்யில் உயிரவன் மெய்யின் உருவவன் மென்மை குணமுள்ள சீதாராம்
எங்கு போனாலும் எங்கும் இருந்தாலும் காற்று எதிலும் ஒட்டாது
உடலெடுத்தாலும் உறவேற்றாலும் ராமரை மாயை கட்டாது
கண்கள் மூடினால் கருமை தோன்றினால் அகிலம் இலையென்றாகாது
ஆயிரம் வார்த்தைகள் பல்லாயிரம் பாடல்கள் ராமரை பாட போதாது!
ராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே ராஜா ராம்
ராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே சீதா ராம்
Wednesday, October 22, 2008
மன்னர் மன்னவன்
Subscribe to:
Post Comments (Atom)



5 comments:
நல்லாருக்கு பாட்டு.
//எவர் சொன்னாலும் என்ன செய்தாலும் ஆறுகள் மலை மேல் ஏறாது
என்ன நேர்ந்தாலும் உயிர் பிரிந்தாலும் அவன் உதடுகள் பொய்மை கூறாது
எவர் அழுதாலும் என்ன தொழுதாலும் சூரியன் இரவில் காயாது
உறவென்றாலும் பகையென்றாலும் அவன் நீதியின் கோள் சாயாது//
//எங்கு போனாலும் எங்கும் இருந்தாலும் காற்று எதிலும் ஒட்டாது
உடலெடுத்தாலும் உறவேற்றாலும் ராமரை மாயை கட்டாது
கண்கள் மூடினால் கருமை தோன்றினால் அகிலம் இலையென்றாகாது
ஆயிரம் வார்த்தைகள் பல்லாயிரம் பாடல்கள் ராமரை பாட போதாது!//
நான் ரசித்த வரிகள் :)
நன்றி கவிநயா :)
''ஆயிரம் வார்த்தைகள் பல்லாயிரம் பாடல்கள் ராமரை பாட போதாது!''
I am speechless by your poems.Before I wrote comments.But step by step your poems make me speechless & I am thinking a lot.
I thank God for showed me this address by accident.
Thanks Niru. I too thank God for giving a reader like you for my blog.
:)
:)
Post a Comment