ரோம ரோமமு ராம நாமமே!
ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
ராம்ராம்
அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
சுவாமி சின்மயானந்தர்

என் கீதாச்சார்யார்
நன்றியுரை
சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
Monday, July 23, 2018
சீராம அரவுத் துதி
உள்ளாய் நீ எதையும் சாராமல் ராமா
உளத்தூயன் ஆனந்தன் சத்யன் நீ ராமா
பெரியோன் நீ குணமற்றோன் சிதைவழிவு அற்றோன்
பேர் இன்பமே பெரும்சொத்தே சரணம் ஶ்ரீ ராமா (1)
புவிராஜன் அசகாயன் பேரமைதி முக்தன்
சம்சாரக் கடல் தாண்ட பாதை நீ ராமா
தேவர்க்குத் தேவன் பெருந்தேவே மாண்பே
நரருக்கு இறைவன் நீ உச்சம் ஶ்ரீ ராமா (2)
கலைக்கெல்லாம் அதிபன் நீ ப்ரம்மம் நீ ராமா
காசியில் சிவனோதும் தாரகம் நீ ராமா
இறந்தவர்கள் காதினிலே ராம்ராம ராமா
என சிவனோதும் திருநாமா ஶ்ரீ ராமா ராமா (3)
பெரும் ரத்ன பீடத்தில் வீற்றுள்ளாய் ராமா
கற்பக மரத்தடியில் கற்பகமாய் ராமா
ஒரு கோடி சூரியனாய் ஒளிர்கின்றாய் ராமா
சீதையும் லக்ஷ்மணரும் பணிந்தேத்தும் ராமா (4)
உனக்கழகூட்டும் செம்பட்டை பொன் இடையில் கட்டும்
நீ தரிக்கும் மலர் மாலைகளை கருவண்டு சுற்றும்
உன் பாதங்களின் கொலுசுகளோ கலகலத்து ஒலிக்கும்
ஶ்ரீராமா உன் மார் மீது கெளஸ்துபமும் ஜொலிக்கும் (5)
செவ்வாயால் நகைபுரியும் நிலவுமுக ராமா
பல நிலவுகளாய் சூரியராய் ஒளிர்கின்றாய் ராமா
பிரம்மாவும் சிவனாரும் பணிவதனால் ராமா
உன் பாதம் அவர் மகுட மணி ஒளிபெற்று ஒளிரும் (6)
பக்தாஞ்சநேயன் உடன்மற்ற பக்தர்
புடைசூழ விளங்கும் ராமா நீ வாழ்க
சின்முத்திரைக் காட்டி ஞானமதை வழங்கும்
உனையன்றி வேறொருவர் நான் வணங்க மாட்டேன் (7)
என் உயிரைக் கேட்டு எமன் வந்து நின்றால்
பயம் கூட்டும் வண்ணம் அவர் தூதர் வந்தால்
அப்போது கோதண்ட ராமா நீவருவாய்
உன் காட்சி என் பயங்கள் அதைப் போக்கும் போக்கும் (8)
இதயமென்னும் கோவிலுக்குள் ஶ்ரீராமா வருவாய்
இனியவனே ஶ்ரீராமா உன்னிதயம் குளிர்வாய்
கைகேயி புத்திரன் சுமித்திரையின் புதல்வர்
பணிந்தேத்தும் ராமாவுன் ஆற்றலதால் உதவு (9)
வானரர்கள் வானவர்கள் சிற்றரசர் பக்தர்
தளபதிகள் புடைசூழ ஶ்ரீராமா வீற்றாய்
என் இறைவா உனை தொழுதேன் மனம் குளிர்வாய் குளிர்வாய்
உன் ஞான ஒளியதனால் என்னகயிருளை களைவாய் (10)
எனையன்றி எனைசுற்றி எல்லாம் நீ ராமா
நான் வணங்கும் ஓரிறைவன் நீதானே ராமா
உனையன்றி வேறொன்று இருப்பதாய் நான் எண்ணேன்
ஐம்பூதங்களும் உனிலிருந்து தோன்றியவை அன்றோ (11)
பரமானந்த உருவே ஶ்ரீராமா வணக்கம்
தேவருக்கு தேவே ஶ்ரீராமா வணக்கம்
ஜானகியின் மணவாளா ஶ்ரீராமா வணக்கம்
மலர்க்கண்ணா மலர்நாபா ஶ்ரீராமா வணக்கம் (12)
பக்தர்களை உயிராக நினைப்பவனே வணக்கம்
புண்ணியம் செய்தவர்கள் உனைக்காண முடியும்
வேதங்கள் காட்டுகின்ற ஆதிமுதல் பொருளே
சீதையவள் நாயகனே அழகனே வணக்கம் (13)
அண்டத்தை படைத்தவனே அழிப்பவனே வணக்கம்
அண்டத்தை சுகிப்பவனே ஆள்பவனே வணக்கம்
அண்டத்தின் கண்ணே அண்டத்தை வெல்வாய்
அண்டத்தின் தந்தை நீ தாய் நீ ஶ்ரீராமா (14)
இவ்வண்டத்தின் நுட்பங்கள் அறிந்தவனே ராமா
இவ்வண்டத்தின் இயக்கத்தை காத்து நின்றாய் ராமா
என் மனது உன்பாத சேவையதில் நிலைக்கும்
உன் பாத சேவையதால் மெய்ஞானம் கிடைக்கும் (15)
கல்லொன்று உன்பாத தூசியால் அன்று
தன் புணர்வாழ்வை பெற்றது அகலிகையாய் நன்று
உன் பாதம் அதை தினமும் தொழுபவரின் பிழைப்பு
மென்மெலும் மேன்மைகள் பெருவதென்ன வியப்பு (16)
ஶ்ரீராமா உன் கதையை நினைவில் கொள்ளும் நபர்கள்
ஶ்ரீராமா உன் பெயரை நிதம் கூறும் நபர்கள்
ஆசைகள் அனைத்தும் நிறைவேற காண்பர்
மரணத்தை காண்பதில்லை துயர்காண்பதில்லை (17)
உண்மையதன் உருவே நிலைக்கின்ற மகிழ்வே
மனம் வாக்குக்கு அகப்படாத விடுதலையின் ஊற்றே
உனை உச்சமென்று உணர்ந்தவன் உன்பாதம் தொழுவான்
உன் பாதம் தொழுவதினும் பேறெதுவும் உண்டோ (18)
உனைவிட உயர்ந்தவர் இல்லை இல்லை இல்லை
எங்கெங்கும் புகழுடையாய் அரக்கர்களை அழிப்போய்
உன் ஆற்றல் அது பற்றி உரைப்பதுவும் எளிதோ
சிறுபிள்ளை ஆகவே சிவன் வில்லை முறித்தாய் (19)
பத்துத்தலையனை அவன் மகன்களோடு
அவன் சுற்றத்தோடு கடல்சூழும் நிலத்தில்
கொல்ல வல்ல வீரர் உனைத் தவிர உண்டோ?
ராவணனை கொன்றவனே வென்றவனே ராமா (20)
ராமா உன் பெயரழகு அது மகிழ்ச்சி ஊற்று
நித்தியமும் ராம்ராம ராம்ராம வென்றே
ராமா உன் பெயரமுதச் சுவை சுவைத்து சுவைத்து
உனைப் போற்றும் அனுமனை போற்றுகின்றேன் ராமா (21)
எப்பொழுதும் ராம்ராம ராம்ராமவென்று
ராமாமுதத்தை பருகுகின்றேன் நாளும்
மரணத்தின் பயமில்லை எப்பயமும் இல்லை
உன்னருளால் உன்னருளால் ஶ்ரீராமா ராமா (22)
சீதையுடனான கோதண்டபாணி
புகழுடைய வீரா ஶ்ரீராமா ராமா
ராவணனின் காலா சுக்ரீவ நண்பா
உனையன்றி வேறு தெய்வமதும் உண்டு (23)
உனையன்றி வேறு தெய்வம் தேவையில்லை
நாயகன் சிம்மாசனத்தில் அமர்ந்தவனே ராமா
உத்தமகுணங்களுக்காய் உயருண்மைக்காக
ஆதர்ச நாயகனாய் நிற்கின்றாய் ராமா (24)
ராமனன்றி வேறு தெய்வம் தேவையில்லை இல்லை
கடல்வென்ற புகழுடையோன் வணங்கத்தக்க புகழோன்
புன்னைகைக்கோ நல்நண்பன் தண்டகாரண்யம் வசித்தோன்
மந்தார மாலை சூடி ஞானமது அருள்வோன் (25)
ராவணனை கரன் முரனை அழித்தவனே என்று
சீதாராமென்று சீராமா என்று
எப்போதும் துதிப்பவனை நோக்குவாய் ராமா
அழிவில்லா உண்மையே ஶ்ரீராமா ராமா (26)
கௌசல்யை சுமித்திரை கைகேயி புதல்வா
குரங்குகளின் மன்னனின் நண்பனே ராமா
மந்தார மரத்தின் கீழ் அழகாக நிற்போய்
உன் பாதமலர்கள் போற்றுகின்றேன் ராமா (27)
வான்புகழ் சீராமா அருள்புரிவாய் அருள்வாய்
எதிரிகளின் காலனே அருள்புரிவாய் அருள்வாய்
உன் பக்தர்களை உன்னுயிராய் காப்பவனே அருள்வாய்
என் ராமச்சந்திரனே என்னுயிரே அருள்வாய் (28)
அரவதனின் அசைவனைய இத்துதியை மனத்தில்
அனுதினமும் நினைப்பவன் ராமரிடம் அடைவான்
வேதத்திற்கொப்பாம் இப்பாடல் அறிவீர்
இதை தினம் பாடி பாடி ராமனருள் பெறுவீர்! (29)
ஆதி சங்கரரும் இயற்றிய இத்துதியை
ராமபக்த ரமேஷும் அருந்தமிழில் தந்தேன்
இதை தினம் சொல்வோர் இதயத்தில் பதிப்போர்
உத்தமராய் உலகில் உயர்வற உயர்வார் (30)
Posted by ramesh sadasivam at 7:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Post a Comment