ராமா ராமா ராமா ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ஸ்ரீ ராமா ராமா ராமா
சிற்றின்ப சிக்கல்களில் கட்டுண்டது போதும்
ஏதுமற்ற ஏகாந்தத்தில் நிலைத்திருக்க வேண்டும்
உங்கள் புகழ் மட்டும் சிந்திக்கின்ற ஒரு மனது போதும்
என்னுள்ளிருக்கும் உங்களையே மனம் நாட வேண்டும்
என் கடந்த கால இழப்புகளை நான் திருத்தவும் வேண்டாம்
எதிர்கால எதிர்பார்ப்பில் எனை நான் வருத்தவும் வேண்டாம்
இப்பொழுது உங்கள் காலடியில் என் மனம் நிலைக்க வேண்டும்
முற்பொழுதும் பிற்பொழுதும் என் மனதில் மறைந்துவிட வேண்டும்
மன்னிக்கும் பெருங்குணத்தை மனம் கற்றிடவும் வேண்டும்
தங்கள் வார்த்தை மீறா பக்குவத்தை நான் பெற்றிடவும் வேண்டும்
உதவி கேட்பவரை எடைபோடாமல் உதவும் குணம் வேண்டும்
ஏமாற்றுதல் குற்றம் ஏமாறுதல் குற்றமிலை எனும் தெளிவு வேண்டும்
தங்கள் வல்லமையில் அசையாத நம்பிக்கை வேண்டும்
அந்த நம்பிக்கையில் என் கவலைகளை நான் மறக்க வேண்டும்
தாங்கள் தருவதெல்லாம் நன்மையென்ற நம்பிக்கை வேண்டும்
தாங்கள் தரும் கடும் விஷத்தை மறுக்காமல் நான் உண்ண வேண்டும்
தனை காக்க பிறரழிக்கும் குணம் அழிய வேண்டும்
பிறர் காக்க தனையழிக்கும் குணம் மலர வேண்டும்
தன்னை முன்னிலைப் படுத்தாத சொல் சொல்ல வேண்டும்
உயர்வு தாழ்வு மனப்பான்மையற்ற மனநிலையும் வேண்டும்
தங்கள் அன்புக்கு அடிபணிந்து நான் வாழ வேண்டும்
தங்கள் பண்புக்கு மாணவனாய் நான் விளங்க வேண்டும்
மண்ணோடு மண்ணாக நான் மக்குகின்ற போதும்
தங்கள் திருப்பெயரை தெவிட்டாமல் நான் சொல்ல வேண்டும்
ராமா ராமா ராமா ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ஸ்ரீ ராமா ராமா ராமா
4 comments:
beautiful! :)
Thanks friend! :)
ரொம்ப நாளாச்சு, பார்த்து. நலந்தானே ரமேஷ்?
//தங்கள் அன்புக்கு அடிபணிந்து நான் வாழ வேண்டும்
தங்கள் பண்புக்கு மாணவனாய் நான் விளங்க வேண்டும்
மண்ணோடு மண்ணாக நான் மக்குகின்ற போதும்
தங்கள் திருப்பெயரை தெவிட்டாமல் நான் சொல்ல வேண்டும்//
பிடித்த வரிகள் :)
நான் நலம் கவிநயா!
மிக்க நன்றி!
ஸ்ரீ ராம ஜெயம்!
Post a Comment