அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி
மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு
காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?
ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?
எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை
அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்
ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!
18 comments:
சன்னிதியில் அமைதி. அருமையான எழுத்து.
-வித்யா
நன்றி விதூஷ் அக்கா. :)
''ராம நாமம் ராம நாமம் ராம நாமம் நிம்மதி
ராம நாமம் சொல்லும் நெஞ்சம் ஆகிவிடும் சன்னிதி''.
It's TRUE.
I like it very much.Very nice tune & childish voice too.
I remembered your 'Rama baktha Hanuman' song while I was listening it as this one also catchy song like that.
Wonderful!
Thanks Niru. :)
நல்லா இருக்கு ரமேஷ். பஜனைப் பாடலா பாடறதுக்கு ஏத்தமாதிரி எழுதியிருக்கீங்க.
//ராம நாமம் ராம நாமம் ராம நாமம் வெற்றிடம்//
வெற்றிடம் - ன்னா என்ன mean பண்றீங்க ?
படித்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் நன்றி நண்பரே.
வெற்றிடம் என்பது ஐம்பூதங்களில் முதன்மையானது. ஆகாயம் எனும் அதை பலரும் வானம் என தவறாக புரிந்து கொள்கிறார்கள். நான் அதைத் தான் குறிப்பிட்டேன்.
ராமரைப் போலவே வெற்றிடத்திற்கும் நான் தீவிர ரசிகன். அதனை தியானித்ததாலேயே எனக்கு ஹயக்ரீவர் தரிசனம் கனவில் கிடைத்தது. அவர் தான் வெற்றிடத்தின் உருவம்.
வெற்றிடத்தை பற்றி நான் ஆங்கிலத்தில் இயற்றிய கவிதையை படித்து பார்க்கும் படு கேட்டுக் கொள்கிறேன்.
http://smilemakerkrishna.blogspot.com/2009/03/brimming-space.html
விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீ ரமேஷ்.
உங்கள் ஆங்கிலப் படைப்பு /Brimming Space./-ம் அற்புதம்.
நன்றி.
:)மிக்க நன்றி நண்பரே.
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம பக்தனே ரமேஸ்
ராம பக்தியில் நீங்கள் மூழ்கிக் கிடக்றீர்கள் உங்களைப்போல் இந்த உலமே ராம நாமத்தின் மகிமையை உணரவேண்டும்.
' யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'
இதற்கு அந்த சொல்லின் செல்வன் அனுமன் துணையிருப்பாராக
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம பக்தனே ரமேஸ்
ராம பக்தியில் நீங்கள் மூழ்கிக் கிடக்றீர்கள் உங்களைப்போல் இந்த உலமே ராம நாமத்தின் மகிமையை உணரவேண்டும்.
' யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'
இதற்கு அந்த சொல்லின் செல்வன் அனுமன் துணையிருப்பாராக
உங்களைக்போல் நானும் ஒரு ராம பக்தன் ஆண்டவன் சித்தத்தால் லண்டன் ஆஞ்சநேயர் ஆலயத்தில் தலைவராக இருக்கின்றேன். அது மட்டுமல்ல ஸ்ரீ ராமனுடைய பரமபக்தன் அனுமனை எனது வலது கையிலே லட்சனையாக பொறித்துள்ளேன் ஸ்ரீ ராம நாமத்தின் மகிமையினால் என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்கள் நாழும் நடந்து கொண்டே இருக்கின்றது.
பரமம் பவித்திரம் ஸ்ரீ ராம ஜெயம்
பரமம் விசித்திரம் ஸ்ரீ ராம ஜெயம்
பரமம் சர்வரோக நிவாரணம் ஸ்ரீ ராம ஜெயம்
பரமம் சர்வமங்களம் ஸ்ரீ ராம ஜெயம்
பரமம் பாவ விமோசனம் ஸ்ரீ ராம ஜெயம்
வாழ்க ஸ்ரீ ராம ஜெயம் வளர்க ஸ்ரீ ராம பக்தி
பக்தி தொடரும்.................
இது எங்களுடைய ஆலயத்தின் இணையத்தளம்.
www.anjaneyar.co.uk
தங்களை இணையதளம் மூலமாக சந்தித்ததில் மகிழ்ச்சி. ஸ்ரீராமஜெயம் மகிமையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. ஸ்ரீராமஜெயம்.
தூற்றுவதற்கு ஒன்றுமே இல்லை . உங்கள் உள்ளில் இருந்து ஸ்ரீ ராமன்
கொடுக்கும் வார்த்தைகள். அருமையும் எளிமையும் எல்லோராலும் இனிமையாக பாடவும்
வேண்டி ராமபிரான் நமக்காக கொடுத்த பாட்டு. மிக அருமை. ஜெய் ஸ்ரீ ராம்.
ஸ்ரீராமஜெயம்! ஸ்ரீராமஜெயம்!!
rama rama ramaramaramaramaramaramaramarama
rama rama rama sreeramajayam
sree rama jayam
shri rama jeyam!
Post a Comment