CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஸ்ரீராமர்புகழ்

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்

ஸ்ரீராமபுண்யஜெயம்

பெரிய குரு தட்சணை

தேவகிநந்தன் வசுதேவபுத்ரன்
யசோதேயன் நந்தகுமாரன்

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன்

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன்

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன்

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன்

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன்

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன்

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன்

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன்

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன்

தோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்
பொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்
மலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்
தாமரையாரன் வெண்தாமரையாரன்
செண்பகமலராரன் செந்தாமரையாரன்

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன்

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்

திருத்துழாய்ஆரன் சதுர்வேதஆரன்
பிரபந்தஆரன் அபங்கஆரன்
திருவாய்மொழியாரன் திருப்பாவைமணியாரன்
பல்லாண்டுமுத்தாரன் நாச்சியார்மொழியாரன்

திருமழிசைத்தமிழாரன் மதுரகவிமொழியாரன்
திருமாலையாரன் ஸ்ரீசுப்ரபாதன்
கொஞ்சுகுலசேகரபிஞ்சுதமிழாரன்
திருமங்கைமன்னன்பெரியமொழியாரன்

திருப்பாவையாரன் நாச்சிமொழியாரன்
திருமொழியாரன் சந்தவிருத்தாரன்
திருமாலையாரன் திருவெழுச்சியாரன்
அன்றலர்ந்ததாமரையன் சென்றுளவுமாநிறையன்
கொண்டலுடைவான்நிறத்தன் வெள்ளைமனபால்நிறத்தன்

ஸ்ரீராமானுஜஜெயம்

ஸ்ரீராமானுஜஜெயம்

இளையபெருமாள் துதி

அவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்
அவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்
அவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்
அவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்

அவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்
அவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்
அவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை
உமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை

அவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி
அவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்
அவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்
நீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்

அவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்
அவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்
அவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்
அவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்
பொன்ஆதிஷேஷ ராமானுஜேஷ
லக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே
உடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே
எதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி

கோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி
நாராயண மந்திரம் முழக்கமாய் கூறி
அனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி
நரகம் புக துணிந்த பரம உபகாரி

இளையபெருமாளே உம் பாதம் போற்றி
லக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி
பலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி
ராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி

கிருஷ்ண பலராமரே போற்றி
பலராம கிருஷ்ணரே போற்றி
ராம லக்ஷ்மணரே போற்றி
லக்ஷ்மண ராமரே போற்றி!!

ஸ்ரீராமதூதஜெயம்

ஸ்ரீராமதூதஜெயம்

சின்ன குரு தட்சணை

அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

ரோம ரோமமு ராம நாமமே!

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
- நம்மாழ்வார்


சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்

எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே

கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே

ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே

-கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கிய
ர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-
சிவவாக்கியர்

காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே

ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே

சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?

ராம்ராம்

அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்

கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்

இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!

சுவாமி சின்மயானந்தர்

சுவாமி சின்மயானந்தர்
என் கீதாச்சார்யார்

நன்றியுரை

சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது

அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது

இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது

மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது

கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது

அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ

அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!

சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!

சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!

Wednesday, March 25, 2020

நவரத்ன ராமர்






































பதினாறு புகழ் கொண்டவரே ராமா ராமா
பதினாறு பெயர் கொண்டவரே ராமா ராமா
பதினாறு குணம் கொண்டவரே ராமா ராமா
பதினாறு கொள்கை கொண்ட ராமா ராமா

பதினாறு லக்ஷணங்கள் ராமா ராமா
தேகத்தில் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு உறவுகளை ராமா ராமா
இதயத்தில் கொண்டிருந்தீர் ராமா ராமா

பதினாறு நல்ல காதைகள் ராமா ராமா
வாழ்க்கையில் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு வளங்களை ராமா ராமா
செவ்வனே நீர் கொண்டிருந்தீர் ராமா ராமா

பதினாறு வார்த்தைகளை ராமா ராமா
எவருக்கும் சொல்லி வைத்தீர் ராமா ராமா
ஈரெட்டு ஈரெட்டாய் ராமா ராமா
எட்டெழுத்தை மிஞ்சி நின்றீர் ராமா ராமா

எட்டெழுத்து நாராயணா ராமா ராமா
இறங்கி வந்த ஈரெழுத்தே ராமா ராமா
எட்டாத எட்டெழுத்தை ராமா ராமா
கிட்ட வைத்த ஈரெழுத்தே ராமா ராமா

பதினாறு பதினாறாய் ராமா ராமா
ஒன்பது பதினாறை உம்மில் கண்டேன் ராமா ராமா
ஒவ்வொரு பதினாறும் ரத்தினமாம் ராமா ராமா
நவரத்தினங்கள் உம்மிலுண்டு ராமா ராமா

எட்டெழுத்து நாராயணர் புலியோ ராமா?
பதினாறடி பாய்ந்த குட்டி நீரோ ராமா?
பதினாறடிகள் பாய்ந்த பின்பும் ராமா ராமா
பணிவன்றோ உங்கள் அணி ராமா ராமா!

உங்கள் பதினாறு புகழ்களை ராமா ராமா
சொல்லி நான் மகிழ்வேனே ராமா ராமா
அது தந்திடும் மகிழ்ச்சியை ராமா ராமா
என் சொல்லி பகர்வேனோ ராமா ராமா

தான் தாக்கப் படுகையிலும் ராமா ராமா
நீங்கள் பெண்மையதை மதித்தவர் ராமா ராமா
பாலக வீரனாய் ராமா ராமா
நீங்கள் வேள்வியைக் காத்தவர் ராமா ராமா

பெரு வீரர்கள் அசைக்கா வில்லை ராமா
நீங்கள் எளிதாய் முறித்தவர் ராமா ராமா
நல்ல பரசுராம வில்லினை ராமா
நாணேற்றி நின்றவரே ராமா ராமா

சித்தியின் வார்த்தையை ராமா ராமா
சிரம் மேல் கொண்டவரே ராமா ராமா
தந்தையின் சொல்லை ராமா ராமா
மெய்யாக்கித் தந்தவரே ராமா ராமா

சத்தியத்தை சத்தியத்தை ராமா ராமா
கண்ணாகக் காத்தவரே ராமா ராமா
ஏகபத்னி விரதத்தில் ராமா ராமா
ஏகபிடி கொண்டு நின்ற ராமா ராமா

வைத்த குறி எப்பொழுதும் ராமா ராமா
தப்பாமல் அம்புவிட்ட ராமா ராமா
ஐம்புலனை எப்பொழுதும் ராமா ராமா
கட்டுக்குள் வைத்திருந்த ராமா ராமா

எளியவர் விருந்தினை ராமா ராமா
கனிவோடு ஏற்பவரே ராமா ராமா
சரணென்று வந்தவர்க்கு ராமா ராமா
அரணாக நிற்பவரே ராமா ராமா

எதிர்த்து வந்த அரக்கனுக்கும் ராமா ராமா
ஒரு முறை அன்பு செய்த ராமா ராமா
திருந்தாத அரக்கனையே ராமா ராமா
வெறுப்பின்றி கொன்றொழித்த ராமா ராமா

உங்கள் உயிரான மனைவியையும் ராமா ராமா
கடமை ஆற்ற தியாகம் செய்தீர் ராமா ராமா
உங்கள் உடன் வாழ்ந்த ஜீவனெல்லாம் ராமா ராமா
முக்தி பெற உதவி செய்தீர் ராமா ராமா

உங்கள் பதினாறு பெயர் சொல்லி ராமா ராமா
உங்களை பணிவுடனே நான் துதிப்பேன் ராமா ராமா
என்றும் என் இதயத்தில் ராமா ராமா
இருந்திடுவீர் இருந்திடுவீர் ராமா ராமா

ராமா ரகுகுலதிலகா ஸ்ரீராமா ஸ்ரீராமச்சந்த்ரா
கௌசல்யராமா தசரதராமா அயோத்யராமா கோசலராமா
சீதாராமா ஜானகிராமா ராஜாராமா கோதண்டராமா
லக்ஷ்மணக்ரஜா பரதக்ரஜா சத்ருக்னக்ரஜா ஹனுமந்த்ராமா

உங்கள் திருப்பெயரை சொல்லிச் சொல்லி ராமா ராமா
பதினாறு நன்மைகள் நான் பெற்றேன் ராமா ராமா
அவை ஒவ்வொன்றாய் சொல்லுகிறேன் ராமா ராமா
அதை அணைவருக்கும் அறியவைப்பீர் ராமா ராமா

உங்கள் பேரைச் சொன்னதுமே ராமா ராமா
நல்லதுவும் நடந்ததுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்ல சொல்ல ராமா ராமா
அமைதி எனை ஆண்டதுவே ராமா ராமா

உங்கள் பேரைச் சொல்ல சொல்ல ராமா ராமா
என் குணமதுவும் சிறந்ததுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்ல சொல்ல ராமா ராமா
மகிழ்ச்சியதும் பிறந்ததுவே ராமா ராமா

உங்கள் பேரைச் சொல்லச் சொல்ல ராமா ராமா
என் உள்ளம் உருகியது ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்லச் சொல்ல ராமா ராமா
உவகை உள்ளே பெருகியது ராமா ராமா

என் அறிவும் தெளிந்ததுவே ராமா ராமா
தர்மமதும் புரிந்ததுவே ராமா ராமா
வீரமதும் விளங்கியதே ராமா ராமா
வெற்றியதும் விளைந்ததுவே ராமா ராமா

செல்வமும் செழித்ததுவே ராமா ராமா
கதவுகளும் திறந்தனவே ராமா ராமா
மனமதுவும் அடங்கியது ராமா ராமா
புலன்களும் ஒடுங்கினவே ராமா ராமா

யோகமதும் நிலைத்ததுவே ராமா ராமா
மோக்ஷமதும் கிடைத்ததுவே ராமா ராமா
வரமளித்த பெயரென்றோ ராமா ராமா
வாழ்வளித்த பெயரன்றோ ராமா ராமா

உங்கள் பதினாறு குணங்களை ராமா ராமா
பக்தியுடன் சொல்லிடுவேன் ராமா ராமா
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
பதினாறு குணங்களையும் ராமா ராமா
நான் பெற்றிடவும் அருள்புரிவீர் ராமா ராமா

பதினாறு கொள்கைகளை ராமா ராமா
கண்ணாகக் காத்திருந்தீர் ராமா ராமா
பதினாறு கொள்கைகளை ராமா ராமா
பின்பற்றி வாழ்ந்திடுவேன் ராமா ராமா

உண்மைவார்த்தைபேசுதல் உதவும்வார்த்தைபேசுதல்
சகலருக்கும்உதவுதல் நம்பியோரைக்காப்பாற்றுதல்
பெரியோரைமதித்தல் சிறியோரைஅணைத்தல்
நன்மையைப்போற்றுதல் தீமையைதூற்றுதல்

உடலைவலிமையாக்குதல் மனதைபுனிதமாக்குதல்
புத்திசெழிக்கவைப்பது சித்திசேர்த்துவைப்பது
நன்மைக்காய்ப்பிடிவாதம் அமைதிக்காய்ப்பெருந்தன்மை
நல்லவர்க்குஈரகுணம் அல்லவர்க்குவீரகுணம்

பதினாறு லட்சணங்கள் ராமாராமா
தேகத்தில் கொண்டிருந்தீர் ராமாராமா
லட்சணங்கள் ஒவ்வொன்றாய் ராமாராமா
சொல்லிடுவேன் சொல்லிடுவேன் ராமாராமா

அகன்றதிருகண்களும் அகன்றதிருநெற்றியும்
அலர்ந்ததிருமுகமதும் செம்பவளைஇதழதும்
கதித்திருக்கும்கன்னங்கள் பற்கள்வெள்ளைவண்ணங்கள்
பூசியநற்கழுத்ததும் எடுப்பானதாடையும்

நீண்டதிருக்கைகளும் வலுத்தநற்புயங்களும்
சிவந்தஉள்ளங்கைகளும் உருண்டிருக்கும்விரல்களும்
அகண்டநல்மார்பதும் திரண்டநற்தோள்களும்
ஒட்டியநல்வயிறதும் சிறுத்தநல்லிடையதும்

தந்தையாகதசரதர் அன்னையாககோசலை
தம்பிகளாய்மூன்றுபேர் சிற்றன்னைமூன்றுபேர்
நண்பர்கள்மூன்றுபேர் நல்மனைவியாய்ஜானகி
சேவகனாய்லச்மணர் சேய்களாய்லவகுசர்

குருவாகமூவரும் சீடனாய்பரதரும்
தூதனாயனுமனும் தெய்வமாய்சிவனும்
அமைச்சனாய்பரதரும் பக்தராய்சிவனும்
தளபதியாய்யங்கதன் ராஜாராமரின்குடிகளும்

உன் ஈராறு உறவுகளை ராமாராமா
உவகையுடன் கூறினேனே ராமாராமா
உன் பதினாறு கதைகளை ராமாராமா
உண்மையாய் கூறிடுவேன் ராமாராமா

கௌசல்யை மடியினிலே பிறந்த கதை ஒன்று
தாசரதரின் மார்பினிலே வளர்ந்த கதை ஒன்று
வசிட்டரிடம் சீடராகி கற்ற கதை ஒன்று
கௌசிகரிடம் பாணம் பல பெற்ற கதை ஒன்று

சிக்கீரமே சிவவில்லை முறித்த கதை ஒன்று
பரசுரர்முன் விஷ்ணுவில் தரித்த கதை ஒன்று
தந்தைக்காய் வனம்புகுந்து சென்ற கதை ஒன்று
பாதுகையை பரிசளத்து நின்ற கதை ஒன்று

சூர்ப்பணகை மூக்கதனை அரிந்த கதை ஒன்று
சீதையை தொலைத்துவிட்டு அலைந்த கதை ஒன்று
வாலியை மறைந்துநின்று கொன்ற கதை ஒன்று
யுத்தம் செய்து ராவணனை வென்ற கதை ஒன்று

மகுடமதை தலையதனில் ஏற்ற கதை ஒன்று
அசுவமேத யாகமதை செய்த கதை ஒன்று
மக்களுக்காய் சீதையை பிரிந்த கதை ஒன்று
சீதையின் பொற்சிலையுடன் வாழ்ந்த கதை ஒன்று

பதினாறு செல்வங்களைய ராமாராமா
குறையாமல் பெற்றிருந்தீர் ராமாராமா
கல்வி புகழ் வலிமை வெற்றி ராமாராமா
குறையாமல் பெற்றிருந்தீர் ராமாராமா

நன்மக்கள் நல்லூழ் பொன் நெல்
அறிவு அழகு பெருமை இளமை
நுகர்ச்சி துணிவு நோயின்மை வாழ்நாள்
நிறைவாக பெற்றிருந்தீர் ராமாராமா

இப்படியே இப்படியே ராமாராமா
ஒன்பது பதினாறுகள் ராமாராமா
உங்களில் நான் கண்டேன் ராமாராமா
நவரத்ன ராமரே ராமா ராமா

Saturday, February 1, 2020

அயக்ரீவர் 108 நாம துதி





































குதிரைமுகன் குதிரைகாதன்
குதிரைகன்னன் குதிரைக்கண்ணன்
குதிரைமூக்கன் குதிரைவாயன்
குதிரைநாக்கன் குதிரைப்பல்லன்
குதிரைத்தலையன் குதிரைநெற்றியன் 10

பரிமுகன் பரிகாதன்
பரிகன்னன் பரிகண்ணன்
பரிமூக்கன் பரிவாயன்
பரிநாக்கன் பரிப்பல்லன்
பரித்தலையன் பரிநெற்றியன் 20

அயமுகன் அயகாதன்
அயகன்னன் அயகண்ணன்
அயமூக்கன் அயவாயன்
அயநாக்கன் அயபல்லன்
அயத்தலையன் அயநெற்றியன் 30

அசுவமுகன் அசுவகாதன்
அசுவகன்னன் அசுவகண்ணன்
அசுவமூக்கன் அசுவவாயன்
அசுவநாக்கன் அசுவபல்லன்
அசுவத்தலையன் அசுவநெற்றியன் 40

ஒளிர்முகன் ஒளிர்காதன்
ஒளிர்கன்னன் ஒளிர்க்கண்ணன்
ஒளிர்மூக்கன் ஒளிர்வாயன்
ஒளிர்நாக்கன் ஒளிர்பல்லன்
ஒளிர்த்தலையன் ஒளிர்நெற்றியன் 50

ஒளிர்மகுடன் ஒளிர்தோடன்
ஒளிர்மாலையன் ஒளிராடையன்
ஒளிர்சங்கன் ஒளிர்சக்கரன்
ஒளிர்கௌத்துபன் ஒளிர்நகையன்
ஒளிர்நாமன் ஒளிர்பாதன் 60

ஒளிர்முகத்தன் ஒளிர்கழுத்தன்
ஒளிர்சிரத்தன் ஒளிர்கரத்தன்
ஒளிர்மார்பன் ஒளிர்வயிறன்
ஒளிர்தோளன் ஒளிர்காலன்
ஒளிரறிவன் ஒளிரிறைவன் 70

அறிவுடையோன் தெளிவுடையோன்
அறிவளிப்போன் தெளிவளிப்போன்
கலைவல்லன் வலுச்சொல்லன்
சொற்பலத்தன் சொற்பொருளன்
அறிவுக்கடலன் படிகமனத்தன் 80

அகல்மார்பன் அகல்மனத்தன்
அகலறிவன் அறிவிறைவன்
கலையறிஞன் கலையளிப்பன்
மறையறிஞன் அனைத்தறிவன்
அறிவருள்வன் அணைத்தருள்வன் 90


முன்தீர்மானமழிப்போன் சந்தேகமழிப்போன்
அகயிரிருளழிப்போன் அகவொளியளிப்போன்
அஞ்ஞானமழிப்போன் பிடிவாதமழிப்போன்
குழப்பங்களழிப்போன் நற்தெளிவளிப்போன்
நல்லறிவளிப்போன் நல்ஞானமளிப்போன் 100

அயக்ரீவன் அசுவக்ரீவன்
அயகர்ணன் அசுவகர்ணன்
அயவாக்சன் அசுவாக்சன்
அயவதனன் ஒளிவதனன் 108

Wednesday, January 29, 2020

பரசு ராமர் 108 நாம துதி



பரசுராமன் கோடறிராமன்
பரசுராமமூர்த்தி கோடறிராமமூர்த்தி
பரசுராமசுவாமி கோடறிராமசுவாமி
பரசுராமபெருமாள் கோடறிராமபெருமாள்
பரசுராமதேவன் கோடறிராமதேவன் 10

கோபன் சினன்
கடுங்கோபன் கடுஞ்சினன்
பெருங்கோபன் பெருஞ்சினன்
நியாயக்கோபன் நியாயச்சினன்
தர்மக்கோபன் தர்மச்சினன் 20

தந்தைசொல்மதித்தோன் தாய்தலையறுத்தோன்
தந்தைவரமேற்றோன் தாயவளைமீட்டோன்
தந்தைமனம்வென்றோன் இருதாயரடைந்தோன்
தந்தைபாசத்தனயன் தாய்ப்பாசத்தனயன்
தன்னலமற்றோன் தற்பெருமையற்றோன் 30

வீரன் மாவீரன்
ஒருவீரன் பெருவீரன்
அரும்வீரன் பெரும்வீரன்
தனிவீரன் முனிவீரன்
அற்புதவீரன் அசகாயவீரன் 40

ரேணுகாபுத்ரன் ஜமதாக்னிபுத்ரன்
ரேணுகாமைந்தன் ஜமதாக்னிமைந்தன்
ரேணுகாசிங்கம் ஜமதாக்னிசிங்கம்
ரேணுகாபிள்ளை ஜமதாக்னிபிள்ளை
ரேணுகாபுதல்வன் ஜமதாக்னிபுதல்வன் 50

ஜமதாக்னிசீடன் தத்தாத்ரேயசீடன்
பீஷ்மகுரு துரோணகுரு
கர்ணகுரு கருணைகுரு
அந்தணகுரு அமர்குரு
யுத்தகுரு வீரகுரு 60

கர்த்தவீரியக்காலன் சத்ரியக்குலகாலன்
பெரும்படைக்காலன் சத்ரியவம்சக்காலன்
தனித்தமர்புரிவோன் தனியனாய்வெல்வோன்
தலைகள்பலதுணித்தோன் தலைமுறைகளழித்தோன்
நீரடிநிலமெடுத்தோன் கேரளமமைத்தோன் 70

இருகரத்தன் திறக்கரத்தன்
வலுக்கரத்தன் பலக்கரத்தன்
வலக்கைதிறத்தன் இடக்கைதிறத்தன்
கோடறிக்கரத்தன் வில்லம்புக்கரத்தன்
வாற்கரத்தன் போர்க்கரத்தன் 80

தாய்முன்ராமன் தந்தைமுன்ராமன்
குருமுன்ராமன் வீரத்தால்ராமன்
பலத்தால்ராமன் திறத்தால்ராமன்
நியாயத்தால்ராமன் தர்மத்தால்ராமன்
ஆற்றலால்ராமன் அவதாரராமன் 90


கோபாவதாரன் நியாயாவதாரன்
விஷ்ணாவதாரன் தர்மாவதாரன்
வீராவதாரன் தீராவதாரன்
அந்தணநேசன் சத்ரியபகைவன்
படைகள்முன்துணிந்தோன் சீராமர்முன்பணிந்தோன் 100

ராமநன்மைகண்டோன் ராமபண்புகண்டோன்
ராமவீரம்கண்டோன் ராமயீரம்கண்டோன்
ராமமுடிகண்டோன் ராமபாதம்கண்டோன்
ராமராற்றல்கண்டோன் கோபமதுவிட்டோன் 108

Tuesday, January 28, 2020

விக்ரம மூர்த்தி 108 நாம துதி

























வளர்ந்தோன் வானளாவவளர்ந்தோன்
அளந்தோன் வானத்தையளந்தோன்
நீண்டோன் வான்தொடநீண்டோன்
வளர்த்தோன் தன்னுருவளர்த்தோன்
நின்றோன் வானளாவநின்றோன் 10

விண்ணளந்தோன் மண்ணளந்தோன்
விண்கவர்ந்தோன் மண்கவர்ந்தோன்
விண்ணளந்தபாதன் மண்ணளந்தபாதன்
விண்ணளந்தகாலன் மண்ணளந்தகாலன்
விண்கவர்ந்தமாயன் மண்கவர்ந்தமாயன் 20

பேருருவன் பேருடலன்
பெருவுருவன் பெருவுடலன்
மாவுருவன் மாவுடலன்
மகாவுருவன் மகாவுடலன்
மாமாயன் மகாமாயன் 30

விண்தொட்டபாதன் மண்தொட்டபாதன்
விண்ணெட்டியபாதன் விண்முட்டியபாதன்
விண்தொட்டகாலன் மண்தொட்டகாலன்
விண்ணெட்டியகாலன் மண்ணெட்டியகாலன்
வானெட்டியபாதன் வானெட்டியகாலன் 40

பூவுலகப்பாதன் மூவுலகப்பாதன்
சத்யலோகப்பாதன் சப்தலோகப்பாதன்
பூவுலகக்காலன் மூவுலகக்காலன்
சத்யலோகக்காலன் சப்தலோகக்காலன்
சர்வலோகப்பாதன் சர்வலோகக்காலன் 50

சத்யலோகம்சென்றபாதன் சதுர்முகன்கண்டபாதன்
சதுர்முகன்துதித்தபாதன் சதுர்முகன்தொழுதபாதன்
சதுர்முகன்நினைத்தபாதன் சதுர்முகன்நனைத்தபாதன்
நான்முகன்துதித்தபாதன் நான்முகன்தொழுதபாதன்
நான்முகன்நினைத்தபாதன் நான்முகன்நனைத்தபாதன் 60

விக்ரமவிஷ்ணு விஷ்ணுவிக்ரமன்
விக்ரமநாரணன் நாரணவிக்ரமன்
விக்ரமகேசவன் கேசவவிக்ரமன்
விக்ரமமாலவன் மாலவவிக்ரமன்
விக்ரமவாமனன் வாமனவிக்ரமன் 70

மலர்க்கண்விக்ரமன் மலர்ப்பாதவிக்ரமன்
மலர்நாபவிக்ரமன் மலர்முகவிக்ரமன்
பத்மவிழிவிக்ரமன் பத்மபாதவிக்ரமன்
பத்மநாபவிக்ரமன் பத்மமுகவிக்ரமன்
பூங்கண்விக்ரமன் பூம்பாதவிக்ரமன் 80

விக்ரமமாலன் விக்ரமமாயன்
விக்ரமகாலன் விக்ரமகாயன்
விக்ரமபாதன் விக்ரமஅடியன்
விக்ரமதேகன் விக்ரமவுடலன்
பெருவிக்ரமன் திருவிக்ரமன் 90


சதுர்க்கரவிக்ரமன் நாற்கரவிக்ரமன்
சங்குக்கரவிக்ரமன் சக்கரக்கரவிக்ரமன்
சதுர்க்கைவிக்ரமன் நாற்கைவிக்ரமன்
சங்குக்கைவிக்ரமன் சக்கரக்கைவிக்ரமன்
பாஞ்சன்யக்கையன் சுதர்சனக்கையன் 100

வனமாலைவிக்ரமன் மலர்மாலைவிக்ரமன்
கௌத்துபவிக்ரமன் மணிமார்பவிக்ரமன்
நகையிதழ்விக்ரமன் நகைமன்னவிக்ரமன்
திருநாமவிக்ரமன் பொன்மகுடவிக்ரமன் 108

Monday, December 9, 2019

வாமனர் 108 நாம துதி
















குறளன் குள்ளன்
குட்டன் குறுகன்
சிறுவன் பெறுவன்
சின்னன் சிறியன்
சின்னவன் சிறியவன் 10

குறள்பெருமாள் குள்ளப்பெருமாள்
குட்டப்பெருமாள் குறுகப்பெருமாள்
சிறும்பெருமாள் பெறும்பெருமாள்
சின்னப்பெருமாள் சிறியபெருமாள்
சின்னவப்பெருமாள் சிறியவப்பெருமாள் 20

குறள்விட்ணு குள்ளவிட்ணு
குட்டவிட்ணு குறுகவிட்ணு
சிறும்விட்ணு பெறும்விட்ணு
சின்னவிட்ணு சிறியவிட்ணு
சின்னவவ்விட்ணு சிறியவவ்விட்ணு 30

குறளரி குள்ளவரி
குட்டயரி குறுகயரி
சிறும்மரி பெறும்மரி
சின்னயரி சிறியயரி
சின்னவவ்வரி சிறியவவ்வரி 40

குறளநாரணன் குள்ளநாரணன்
குட்டநாரணன் குறுகுநாரணன்
சிறும்நாரணன் பெறும்நாரணன்
சின்னநாரணன் சிறியநாரணன்
சின்னயந்நாரணன் சிறியந்நாரணன் 50

குறளமால் குள்ளமால்
குட்டமால் குறுகமால்
சிறும்மால் பெறும்மால்
சின்னமால் சிறியமால்
சின்னவம்மால் சிறியயம்மால் 60

காசியபமைந்தன் அதிதிமைந்தன்
காசியபபிள்ளை அதிதிபிள்ளை
காசியபுதல்வன் அதிதிபுதல்வன்
காசியபசேயன் அதிதிசேயன்
காசியபபாலன் அதிதிபாலன் 70

சூரியனிடமேற்றோன் காயத்ரியேற்றோன்
குருவிடமேற்றோன் பூணூலேற்றோன்
காசியபரிடமேற்றொன் அரைஞாணேற்றோன்
அதிதியிடமேற்றோன் கோவணமேற்றோன்
பூமியிடமேற்றோன் மான்தோலேற்றோன் 80

மதியிடமேற்றோன் தண்டத்தையேற்றோன்
பிரம்மனிடமேற்றோன் கமண்டலமேற்றோன்
குபேரனிடமேற்றோன் திருவோடேற்றோன்
சக்தியிடமேற்றோன் முதல்பிச்சையேற்றோன்
வானிடமேற்றோன் சிறுகுடையேற்றோன் 90


பலியிடம்சென்றோன் பலிமுன்நின்றோன்
மூவடிகேட்டோன் மூவுலகளந்தோன்
பலியிடமிரந்தோன் பலியிடம்கரந்தோன்
வானளாவநின்றோன் வானவர்க்காய்வென்றோன்
பலிமண்கவர்ந்தோன் பலிமனங்கவர்ந்தோன் 100

வாமனன் விக்ரமன்
திருவாமனன் திருவிக்ரமன்
வாமனமூர்த்தி விக்ரமமூர்த்தி
வாமனப்பெருமாள் விக்ரமப்பெருமாள் 108

Saturday, November 23, 2019

வராக மூர்த்தி 108 நாம துதி



வராகன் பூவராகன்
வராகமூர்த்தி பூவராகமூர்த்தி
வராகசுவாமி பூவராகசுவாமி
வராகப்பெருமாள் பூவராகப்பெருமாள்
வராகதேவன் பூவராகதேவன் 10

பன்றிமுகன் பன்றிவதனன்
பன்றிமுகமூர்த்தி பன்றிவதனமூர்த்தி
பன்றிமுகசுவாமி பன்றிவதனசுவாமி
பன்றிமுகபெருமாள் பன்றிவதனபெருமாள்
பன்றிமுகதேவன் பன்றிவதனபெருமாள் 20

பெருவராகன் திருவராகன்
பெரும்பன்றியன் திருப்பன்றியன்
கருவராகன் கரும்பன்றியன்
நீலவராகன் கருநீலவராகன்
நீலப்பன்றியன் கருநீலப்பன்றியன் 30

வராகமூக்கன் பன்றிமூக்கன்
கொம்புடைமூக்கன் உலகுடைமூக்கன்
மண்ணெடுத்தமூக்கன் நிலமெடுத்தமூக்கன்
உலகெடுத்தமூக்கன் பூவெடுத்தமூக்கன்
அழகியமூக்கன் அற்புதமூக்கன் 40

கொம்பன் இருக்கொம்பன்
வன்கொம்பன் வெண்கொம்பன்
வலுக்கொம்பன் பலக்கொம்பன்
நலக்கொம்பன் சலக்கொம்பன்
அழகுக்கொம்பன் அற்புதகொம்பன் 50

தந்தன் இருதந்தன்
வன்தந்தன் வெண்தந்தன்
வலுத்தந்தன் பலத்தந்தன்
நலத்தந்தன் சலத்தந்தன்
அழகுத்தந்தன் அற்புதத்தந்தன் 60

நீர்புகுவராகன் நிலமெடுவராகன்
நீர்மீள்வராகன் நிலம்மீள்வராகன்
நீர்நனைத்ததேகன் நிலம்கதைத்தகாதன்
நீரிலுறையான்மன் நீரிலுறையாத்மன்
நீரான்மன் நீராத்மன் 70

பூதேவிகாத்தோன் பூதேவியணைத்தோன்
பூதேவிமீட்டோன் பூதேவிமணந்தோன்
பூதேவிநேசன் பூதேவிபாசன்
சீதேவிநேசன் சீதேவிபாசன்
அகிலவல்லிநேசன் அகிலவல்லிபாசன் 80

இரண்யாட்சவதையன் நல்ஞானக்கதையன்
பூமியிடம்கதைத்தோன் அரக்கனைசிதைத்தோன்
அரக்கனையடித்தோன் அரக்கனைவுதைத்தோன்
அரக்கனைமிதித்தோன் அரக்கனைதுவைத்தோன்
அரக்கனைக்கொன்றோன் அரக்கனையழித்தோன் 90


சதுர்க்கரவராகன் மலர்க்கரவராகன்
சங்குக்கரவராகன் சக்கரக்கரவராகன்
கதைக்கரவராகன் கட்கக்கரவராகன்
அபயக்கரவராகன் அடிசுட்டும்வராகன்
வெண்சங்குவராகன் சுடராழிவராகன் 100

ஆதிவராகன் திருமலைவராகன்
கல்யாணவராகன் திருவிடந்தைவராகன்
பிரளயவராகன் கள்ளயள்ளிவராகன்
யக்ஞவராகன் திருமுட்ணவராகன் 108

Monday, November 18, 2019

கூர்மமூர்த்தி 108 நாம துதி
















கூர்மன் ஆமையன்
கூர்மமூர்த்தி ஆமைமூர்த்தி
கூர்மபெருமாள் ஆமைபெருமாள்
கூர்மாவதாரன் ஆமையவதாரன்
கூர்மதேவன் ஆமைதேவன் 10

கூர்மவிஷ்ணு விஷ்ணுகூர்மன்
கூர்மவரி அரிகூர்மன்
கூர்மநாரணன் நாரணக்கூர்மன்
கூர்மமால் மாலக்கூர்மன்
கூர்மமாயன் மாயக்கூர்மன் 20

விஷ்ணாமையன் அரியாமையன்
நாரணாமையன் மாயாமையன்
கேசவாமையன் மாதவாமையன்
பாலாமையன் மாலாமையன்
நல்லாமையன் ஞானாமையன் 30

மலைசுமந்தமுதுகன் கிரிசுமந்தமுதுகன்
மலைதாங்கியமுதுகன் கிரிதாங்கியமுதுகன்
ஓடுடையமுதுகன் முதுகோடுடுடையோன்
வலுவுடைமுதுகன் வலுவுடையோடன்
பலமுடைமுதுகன் பலமுடையோடன் 40

பாற்கடல்கூர்மன் பாற்கடலாமையன்
கடற்கடைக்கூர்மன் கடற்கடையாமையன்
கடலடிக்கூர்மன் கடலடியாமையன்
மலைக்கடிக்கூர்மன் மலைக்கடியாமையன்
கிரிக்கடிக்கூர்மன் கிரிக்கடியாமையன் 50

அமிர்தக்காரணன் ஆலகாலகாரணன்
ஐராவதக்காரணன் உச்சசிரவக்காரணன்
காமதேனுகாரணன் கற்பகக்காரணன்
சந்திரக்காரணன் பாரிஜாதக்காரணன்
கௌத்துபக்காரணன் திருமகள்காரணன் 60

அமிர்தக்காரியன் ஆலகாலகாரியன்
ஐராவதக்காரியன் உச்சசிரவக்காரியன்
காமதேனுக்காரியன் கற்பகக்காரியன்
சந்திரக்காரியன் பாரிஜாதக்காரியன்
கௌத்துபக்காரியன் திருமகள்காரியன் 70

அமிர்தமளித்தோன் ஆலகாலமளித்தோன்
ஐராவதமளித்தோன் உச்சசிரவமளித்தோன்
காமதேனுவளித்தோன் கற்பகமளித்தோன்
சந்திரனளித்தோன் பாரிஜாதமளித்தோன்
கௌத்துபமணிந்தோன் திருமகள்மணந்தோன் 80

உதவும்மனக்கூர்மன் உழைக்கும்குணகூர்மன்
உதவும்மனவாமையன் உழைக்குணவாமையன்
நாமநெற்றிக்கூர்மன் செயல்வெற்றிக்கூர்மன்
நாமநெற்றியாமையன் செயல்வெற்றியாமையன்
கர்மயோகக்கூர்மன் கர்மயோகவாமையன் 90
தேவர்த்தொழுங்கூர்மன் சுரர்த்தொழுங்கூர்மன்
அமரர்த்தொழுங்கூர்மன் வானவர்த்தொழுங்கூர்மன்
விண்ணவர்தொழுங்கூர்மன் மண்ணவர்த்தொழுங்கூர்மன் 
இந்திரந்தொழுங்கூர்மன் சந்திரந்தொழுங்கூர்மன்
பகலவர்த்தொழுங்கூர்மன் அலைமகள்தொழுங்கூர்மன் 100

நல்லக்கூர்மன் ஞானக்கூர்மன்
அன்புக்கூர்மன் அதிபலகூர்மன்
கூர்மசுரன் கூர்மநற்சுரன்
கௌத்துபக்கூர்மன் பொன்மகுடக்கூர்மன் 108