ரோம ரோமமு ராம நாமமே!
ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
ராம்ராம்
அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
சுவாமி சின்மயானந்தர்

என் கீதாச்சார்யார்
நன்றியுரை
சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
Wednesday, March 25, 2020
நவரத்ன ராமர்
பதினாறு புகழ் கொண்டவரே ராமா ராமா
பதினாறு பெயர் கொண்டவரே ராமா ராமா
பதினாறு குணம் கொண்டவரே ராமா ராமா
பதினாறு கொள்கை கொண்ட ராமா ராமா
பதினாறு லக்ஷணங்கள் ராமா ராமா
தேகத்தில் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு உறவுகளை ராமா ராமா
இதயத்தில் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு நல்ல காதைகள் ராமா ராமா
வாழ்க்கையில் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு வளங்களை ராமா ராமா
செவ்வனே நீர் கொண்டிருந்தீர் ராமா ராமா
பதினாறு வார்த்தைகளை ராமா ராமா
எவருக்கும் சொல்லி வைத்தீர் ராமா ராமா
ஈரெட்டு ஈரெட்டாய் ராமா ராமா
எட்டெழுத்தை மிஞ்சி நின்றீர் ராமா ராமா
எட்டெழுத்து நாராயணா ராமா ராமா
இறங்கி வந்த ஈரெழுத்தே ராமா ராமா
எட்டாத எட்டெழுத்தை ராமா ராமா
கிட்ட வைத்த ஈரெழுத்தே ராமா ராமா
பதினாறு பதினாறாய் ராமா ராமா
ஒன்பது பதினாறை உம்மில் கண்டேன் ராமா ராமா
ஒவ்வொரு பதினாறும் ரத்தினமாம் ராமா ராமா
நவரத்தினங்கள் உம்மிலுண்டு ராமா ராமா
எட்டெழுத்து நாராயணர் புலியோ ராமா?
பதினாறடி பாய்ந்த குட்டி நீரோ ராமா?
பதினாறடிகள் பாய்ந்த பின்பும் ராமா ராமா
பணிவன்றோ உங்கள் அணி ராமா ராமா!
உங்கள் பதினாறு புகழ்களை ராமா ராமா
சொல்லி நான் மகிழ்வேனே ராமா ராமா
அது தந்திடும் மகிழ்ச்சியை ராமா ராமா
என் சொல்லி பகர்வேனோ ராமா ராமா
தான் தாக்கப் படுகையிலும் ராமா ராமா
நீங்கள் பெண்மையதை மதித்தவர் ராமா ராமா
பாலக வீரனாய் ராமா ராமா
நீங்கள் வேள்வியைக் காத்தவர் ராமா ராமா
பெரு வீரர்கள் அசைக்கா வில்லை ராமா
நீங்கள் எளிதாய் முறித்தவர் ராமா ராமா
நல்ல பரசுராம வில்லினை ராமா
நாணேற்றி நின்றவரே ராமா ராமா
சித்தியின் வார்த்தையை ராமா ராமா
சிரம் மேல் கொண்டவரே ராமா ராமா
தந்தையின் சொல்லை ராமா ராமா
மெய்யாக்கித் தந்தவரே ராமா ராமா
சத்தியத்தை சத்தியத்தை ராமா ராமா
கண்ணாகக் காத்தவரே ராமா ராமா
ஏகபத்னி விரதத்தில் ராமா ராமா
ஏகபிடி கொண்டு நின்ற ராமா ராமா
வைத்த குறி எப்பொழுதும் ராமா ராமா
தப்பாமல் அம்புவிட்ட ராமா ராமா
ஐம்புலனை எப்பொழுதும் ராமா ராமா
கட்டுக்குள் வைத்திருந்த ராமா ராமா
எளியவர் விருந்தினை ராமா ராமா
கனிவோடு ஏற்பவரே ராமா ராமா
சரணென்று வந்தவர்க்கு ராமா ராமா
அரணாக நிற்பவரே ராமா ராமா
எதிர்த்து வந்த அரக்கனுக்கும் ராமா ராமா
ஒரு முறை அன்பு செய்த ராமா ராமா
திருந்தாத அரக்கனையே ராமா ராமா
வெறுப்பின்றி கொன்றொழித்த ராமா ராமா
உங்கள் உயிரான மனைவியையும் ராமா ராமா
கடமை ஆற்ற தியாகம் செய்தீர் ராமா ராமா
உங்கள் உடன் வாழ்ந்த ஜீவனெல்லாம் ராமா ராமா
முக்தி பெற உதவி செய்தீர் ராமா ராமா
உங்கள் பதினாறு பெயர் சொல்லி ராமா ராமா
உங்களை பணிவுடனே நான் துதிப்பேன் ராமா ராமா
என்றும் என் இதயத்தில் ராமா ராமா
இருந்திடுவீர் இருந்திடுவீர் ராமா ராமா
ராமா ரகுகுலதிலகா ஸ்ரீராமா ஸ்ரீராமச்சந்த்ரா
கௌசல்யராமா தசரதராமா அயோத்யராமா கோசலராமா
சீதாராமா ஜானகிராமா ராஜாராமா கோதண்டராமா
லக்ஷ்மணக்ரஜா பரதக்ரஜா சத்ருக்னக்ரஜா ஹனுமந்த்ராமா
உங்கள் திருப்பெயரை சொல்லிச் சொல்லி ராமா ராமா
பதினாறு நன்மைகள் நான் பெற்றேன் ராமா ராமா
அவை ஒவ்வொன்றாய் சொல்லுகிறேன் ராமா ராமா
அதை அணைவருக்கும் அறியவைப்பீர் ராமா ராமா
உங்கள் பேரைச் சொன்னதுமே ராமா ராமா
நல்லதுவும் நடந்ததுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்ல சொல்ல ராமா ராமா
அமைதி எனை ஆண்டதுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்ல சொல்ல ராமா ராமா
என் குணமதுவும் சிறந்ததுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்ல சொல்ல ராமா ராமா
மகிழ்ச்சியதும் பிறந்ததுவே ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்லச் சொல்ல ராமா ராமா
என் உள்ளம் உருகியது ராமா ராமா
உங்கள் பேரைச் சொல்லச் சொல்ல ராமா ராமா
உவகை உள்ளே பெருகியது ராமா ராமா
என் அறிவும் தெளிந்ததுவே ராமா ராமா
தர்மமதும் புரிந்ததுவே ராமா ராமா
வீரமதும் விளங்கியதே ராமா ராமா
வெற்றியதும் விளைந்ததுவே ராமா ராமா
செல்வமும் செழித்ததுவே ராமா ராமா
கதவுகளும் திறந்தனவே ராமா ராமா
மனமதுவும் அடங்கியது ராமா ராமா
புலன்களும் ஒடுங்கினவே ராமா ராமா
யோகமதும் நிலைத்ததுவே ராமா ராமா
மோக்ஷமதும் கிடைத்ததுவே ராமா ராமா
வரமளித்த பெயரென்றோ ராமா ராமா
வாழ்வளித்த பெயரன்றோ ராமா ராமா
உங்கள் பதினாறு குணங்களை ராமா ராமா
பக்தியுடன் சொல்லிடுவேன் ராமா ராமா
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
பதினாறு குணங்களையும் ராமா ராமா
நான் பெற்றிடவும் அருள்புரிவீர் ராமா ராமா
பதினாறு கொள்கைகளை ராமா ராமா
கண்ணாகக் காத்திருந்தீர் ராமா ராமா
பதினாறு கொள்கைகளை ராமா ராமா
பின்பற்றி வாழ்ந்திடுவேன் ராமா ராமா
உண்மைவார்த்தைபேசுதல் உதவும்வார்த்தைபேசுதல்
சகலருக்கும்உதவுதல் நம்பியோரைக்காப்பாற்றுதல்
பெரியோரைமதித்தல் சிறியோரைஅணைத்தல்
நன்மையைப்போற்றுதல் தீமையைதூற்றுதல்
உடலைவலிமையாக்குதல் மனதைபுனிதமாக்குதல்
புத்திசெழிக்கவைப்பது சித்திசேர்த்துவைப்பது
நன்மைக்காய்ப்பிடிவாதம் அமைதிக்காய்ப்பெருந்தன்மை
நல்லவர்க்குஈரகுணம் அல்லவர்க்குவீரகுணம்
பதினாறு லட்சணங்கள் ராமாராமா
தேகத்தில் கொண்டிருந்தீர் ராமாராமா
லட்சணங்கள் ஒவ்வொன்றாய் ராமாராமா
சொல்லிடுவேன் சொல்லிடுவேன் ராமாராமா
அகன்றதிருகண்களும் அகன்றதிருநெற்றியும்
அலர்ந்ததிருமுகமதும் செம்பவளைஇதழதும்
கதித்திருக்கும்கன்னங்கள் பற்கள்வெள்ளைவண்ணங்கள்
பூசியநற்கழுத்ததும் எடுப்பானதாடையும்
நீண்டதிருக்கைகளும் வலுத்தநற்புயங்களும்
சிவந்தஉள்ளங்கைகளும் உருண்டிருக்கும்விரல்களும்
அகண்டநல்மார்பதும் திரண்டநற்தோள்களும்
ஒட்டியநல்வயிறதும் சிறுத்தநல்லிடையதும்
தந்தையாகதசரதர் அன்னையாககோசலை
தம்பிகளாய்மூன்றுபேர் சிற்றன்னைமூன்றுபேர்
நண்பர்கள்மூன்றுபேர் நல்மனைவியாய்ஜானகி
சேவகனாய்லச்மணர் சேய்களாய்லவகுசர்
குருவாகமூவரும் சீடனாய்பரதரும்
தூதனாயனுமனும் தெய்வமாய்சிவனும்
அமைச்சனாய்பரதரும் பக்தராய்சிவனும்
தளபதியாய்யங்கதன் ராஜாராமரின்குடிகளும்
உன் ஈராறு உறவுகளை ராமாராமா
உவகையுடன் கூறினேனே ராமாராமா
உன் பதினாறு கதைகளை ராமாராமா
உண்மையாய் கூறிடுவேன் ராமாராமா
கௌசல்யை மடியினிலே பிறந்த கதை ஒன்று
தாசரதரின் மார்பினிலே வளர்ந்த கதை ஒன்று
வசிட்டரிடம் சீடராகி கற்ற கதை ஒன்று
கௌசிகரிடம் பாணம் பல பெற்ற கதை ஒன்று
சிக்கீரமே சிவவில்லை முறித்த கதை ஒன்று
பரசுரர்முன் விஷ்ணுவில் தரித்த கதை ஒன்று
தந்தைக்காய் வனம்புகுந்து சென்ற கதை ஒன்று
பாதுகையை பரிசளத்து நின்ற கதை ஒன்று
சூர்ப்பணகை மூக்கதனை அரிந்த கதை ஒன்று
சீதையை தொலைத்துவிட்டு அலைந்த கதை ஒன்று
வாலியை மறைந்துநின்று கொன்ற கதை ஒன்று
யுத்தம் செய்து ராவணனை வென்ற கதை ஒன்று
மகுடமதை தலையதனில் ஏற்ற கதை ஒன்று
அசுவமேத யாகமதை செய்த கதை ஒன்று
மக்களுக்காய் சீதையை பிரிந்த கதை ஒன்று
சீதையின் பொற்சிலையுடன் வாழ்ந்த கதை ஒன்று
பதினாறு செல்வங்களைய ராமாராமா
குறையாமல் பெற்றிருந்தீர் ராமாராமா
கல்வி புகழ் வலிமை வெற்றி ராமாராமா
குறையாமல் பெற்றிருந்தீர் ராமாராமா
நன்மக்கள் நல்லூழ் பொன் நெல்
அறிவு அழகு பெருமை இளமை
நுகர்ச்சி துணிவு நோயின்மை வாழ்நாள்
நிறைவாக பெற்றிருந்தீர் ராமாராமா
இப்படியே இப்படியே ராமாராமா
ஒன்பது பதினாறுகள் ராமாராமா
உங்களில் நான் கண்டேன் ராமாராமா
நவரத்ன ராமரே ராமா ராமா
Posted by ramesh sadasivam at 5:58 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment