ராம் ராம் ராம் ராஜா ராம்
ராம் ராம் ராம் ஹரே ராஜா ராம்
ராம் ராம் ராம் சீதா ராம்
ராம் ராம் ராம் ஹரே சீதா ராம்
ஒரு முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
உள்ளம் உள்ளம் உருகுதய்யா
இரு முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
இதயம் இதயம் இளகுதய்யா
மும்முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
முன்வினை யாவும் அகன்றதய்யா
நான்முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
நான்மறை ரகசியம் புரிந்ததய்யா
ஐமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
ஐயம் ஐயம் அகன்றதய்யா
அறுமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
அச்சம் மடமை அழிந்ததய்யா
எழுமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
எண்ணங்கள் யாவும் சிறந்ததய்யா
எண்முறை உன் பெயர் சொல்லிவிட்டால்
எண்ணிய காரியம் நடந்ததய்யா
நவமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
நவகோள் மகிழ்ந்து உதவுதய்யா
பலமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
வாழ்க்கையில் வேறென்ன வேண்டுமய்யா?
ராம் ராம் ராம் ராஜா ராம்
ராம் ராம் ராம் ஹரே ராஜா ராம்
ராம் ராம் ராம் சீதா ராம்
ராம் ராம் ராம் ஹரே சீதா ராம்
18 comments:
Wonderful poem 'na!
ram ram :)
thanks mani.
Jai shri ram.
You are invited to listen to this song at
http://pureaanmeekam.blogspot.com
soon.
subbu rathinam.
stamford CT USA
//பலமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
வாழ்க்கையில் வேறென்ன வேண்டுமய்யா?//
உண்மைதான் ரமேஷ். வேறென்ன வேண்டும்? அழகான பாடல்.
#sury
-------
Hello Sir, Thanks for you commendable effort in making this poem into a beautiful song.
#கவிநயா
-----------
நிச்சயமாக வேறொன்றும் தேவையில்லை. நன்றி கவிநயா.
http://www.youtube.com/watch?v=Ifrk4TiXKlY
Please cut and paste the above URL to listen to your song in different raagas adding the pictures you have sent yesterday
subburathinam.
Good one!
Thanks Jeeva.
பாடல் உருக்கமாக அமைந்திருக்கிறது தாத்தா. படங்களும் அருமை.
//உண்ணும் உணவெல்லாம் உன் இனிப்பு
காணும் கனவெல்லாம் உன் நினைப்பு
பார்க்கும் இடமெல்லம் உன் அழகு
என் மனம் தீப் பற்றிய மெழுகு...!//
//உன்
காயங்களுக்கு
மருந்தளிக்கவே
காத்திருக்கும்...
என் கைகள்...!
நீ
மருந்தளிக்கவே
காத்திருக்கும்
என் காயங்கள்...!//
//உன் பார்வையிலே
பூத்த மலர்
உன் புன்னகைக்கு
வாடுதடி..//
//உன்னை காதலிப்பதாக நான் நம்புவது
உன்னை மறக்க முடியாததால் அல்ல
மறக்க விரும்பாததால்...//
கவிதை ன்னு இப்படிஎல்லாம் எழுதி அதையும் நெட்-ல போடும் கிறுக்கன்கள் மத்தியில்
//பலமுறை உன் பெயர் சொல்லிவிட்டால்
வாழ்க்கையில் வேறென்ன வேண்டுமய்யா?//
இவ்வளவு அழகா, பக்தியோடு சொல்லியும் அதன் பலன்கள் பற்றி எழுதும்
u r great pa. u r Genius.....
தோழி... இது பக்திக்கான தளம். தங்கள் கேலி ரசனைக்குரியது.... ஆனால் இந்தத் தளத்தில் வேண்டாமே.. ப்ளீஸ்.
தவறாக நினைக்க வேண்டாம்.
ok thazha
:)
இராமனின் நாமமே தாரக நாமம்
வேண்டும் வரங்களை தந்திடும் நாமம்
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனுக்கு
அலை கடல் தாண்டிட உதவிய நாமம்
ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் சீதாராம்
ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் சீதாராம்
நாராயண சொல்லும் அட்ச்சாசரத்தில்
ரா என்னும் அட்ச்சரம் ஒலித்திடுமே
அது நமசிவாய என்னும் பஞ்சா சரத்தில்
மா என்னும் ஜீவனில் கலந்திடவே
தோன்றியதே ராம நாமமே
துதித்திடுவோமே ராம நாமமே
அமுதமனைய ஸ்ரீ ராமனின் நாமத்தை
அனுதினம் பாடியே அவன் அருள் பெறுவோம்
ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் சீதாராம்
ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் சீதாராம்
இது எங்க பள்ளி prayer song. நல்லா இருக்கா? enga school / college prayer songs எல்லாமே நல்லா இருக்கும். எனக்கு பிடித்த பாடலில் இதும் ஓன்று.
நாராயண சொல்லும் அட்ச்சாசரத்தில்
ரா என்னும் அட்ச்சரம் ஒலித்திடுமே
அது நமசிவாய என்னும் பஞ்சா சரத்தில்
மா என்னும் ஜீவனில் கலந்திடவே
தோன்றியதே ராம நாமமே
துதித்திடுவோமே ராம நாமமே //
மிகப் பெரிய விஷயத்தை அழகாக சொல்லும் வரிகள். இதை நான் உணர்ந்திருக்கேன். ரொம்ப நல்லாருக்கு! முடிஞ்சா பாடி you tube-ல ஏத்துங்க.
பலமுறை உன் நாமம் சொல்வதற்கு
பலம் தரவேண்டும் இந்த நாவினிற்கு
பல பல பிறவிகள் எடுத்தாலும் - என்றும்
பலமிக்க ராம நாமம் சொல்ல வைப்பாய்
ஸ்ரீராமஜெயம்! ஸ்ரீராமஜெயம்!
Post a Comment