நாரணா நாரணா
தர்மம் காக்கும் தாமோதரா
ஞானம் அளிக்கும் ஞானேஷ்வரா
ஞாலம் விழுங்கும் ஜகதீஷ்வரா
பாற்கடல் துயிலும் பரந்தாமா
பிறப்பெடுக்கும் உயிர்களுள்ளே
உயிரெனும் துளியாய் இருப்பவனே
ஆணினுள்ளும் பெண்ணினுள்ளும்
உயிரெனும் துளியாய் இருப்பவனே
ஆணிலென்ன பெண்ணிலென்ன
அலி என்ற அப்பாலின்னுள்ளும்
உயிரெனும் துளியாய் இருப்பவனே
ஆத்ம நல் உருவனே பரமாத்மா
நீயில்லாத உயிர்களுண்டோ
நீயில்லாது உயிருமுண்டோ
நீயெடுக்காத பிறவி உண்டோ
நீ உமிழாமல் இவ்வண்டமுண்டோ??
நாரணா நாரணா
நாரணா நாரணா
பாம்பணை மேலே பரமாத்மா
உயிர்களின் உள்ளே சீவாத்மா
இதயத்தில் உறையும் மனசாட்சி
ஈரேழ் உலகமும் உன் ஆட்சி
உனை சரண் புகுந்த பக்தருக்கு
தன்னையே வரமாய் தருபவனே
உந்தன் பாதம் துதிப்பவர்க்கு
ஞானம் ஞானம் அருள்பவனே
தர்மம் காத்திட அவதரித்து
தர்மம் நிலைபெற செய்வபவனே
சங்கு சக்கரம் கதையுடையாய்
அதை தாங்கும் நான்கு கரமுடையாய்
உனை துதிக்காத தேவருண்டோ?
உனை துதிக்காமல் வழியுமுண்டோ?
உந்தன் நாமங்கள் சொல்லச் சொல்ல
வல்வினை வல்வினை தேயாதோ??
நாரணா நாரணா
நாரணா நாரணா
தர்மம் காக்கும் தாமோதரா
ஞானம் அளிக்கும் ஞானேஷ்வரா
ஞாலம் விழுங்கும் ஜகதீஷ்வரா
பாற்கடல் துயிலும் பரந்தாமா
நாரணா நாரணா
நாரணா நாரணா
பாம்பணை மேலே பரமாத்மா
உயிர்களின் உள்ளே சீவாத்மா
இதயத்தில் உறையும் மனசாட்சி
ஈரேழ் உலகமும் உன் ஆட்சி
0 comments:
Post a Comment