ஈஷ்வரா ஈஷ்வரா
ஈஷ்வரா ஈஷ்வரா
திரிபுரம் எரித்த த்ரிபுரேஷ்வரா
கங்கையை தாங்கிய கங்காதரா
கற்றை சடைமுடி சடைமுடியா
ஒற்றை பிறையணி பிறைசூடா
பிறப்பெடுக்கும் உயிர்களுள்ளே
லிங்க உருவாய் இருப்பவனே
ஆணினுள்ளும் பெண்ணினுள்ளும்
லிங்க உருவாய் இருப்பவனே
ஆணிலென்ன பெண்ணிலென்ன
அலி என்ற அப்பாலின்னுள்ளும்
லிங்க உருவாய் இருப்பவனே
லிங்கேசா லிங்கேசா
நீயில்லாத உயிர்களுண்டோ
நீயில்லாத இடமுமுண்டோ
நீயில்லாத பொருளுமுண்டோ
நீயில்லாது இவ்வண்டமுண்டோ
ஈஷ்வரா ஈஷ்வரா
ஈஷ்வரா ஈஷ்வரா
பாம்பணி கழுத்தனே பரமேஷ்வரா
பக்தரை காக்கும் பக்தேஷ்வரா
நடனம் புரியும் நடராஜா
முக்கண்ணப்பனே திரினேத்ரா
உனை துதிக்கும் பக்தர்களின்
குற்ற வினைகளை அழிப்பவனே
உனை துதிக்க உனை துதிக்க
வரங்கள் வள்ளலாய் தருபவனே
மலைமகளின் மணமகனே
இடபத்தின் மீது வருபவனே
படியளக்கும் பரமேஷா
ஓர் எறும்பையும் நீ மறந்ததுண்டோ
உனை வணங்காத தேவருண்டோ?
உனை வணங்காமல் வழியுமுண்டோ?
விஷ்ணுவின் நாமங்கள் மனனம் செய்ய
எனக்குதவிய தேவன் நீயன்றோ??
ஈஷ்வரா ஈஷ்வரா
ஈஷ்வரா ஈஷ்வரா
திரிபுரம் எரித்த த்ரிபுரேஷ்வரா
கங்கையை தாங்கிய கங்காதரா
கற்றை சடைமுடி சடைமுடியா
ஒற்றை பிறையணி பிறைசூடா
ஈஷ்வரா ஈஷ்வரா
ஈஷ்வரா ஈஷ்வரா
பாம்பணி கழுத்தனே பரமேஷ்வரா
பக்தரை காக்கும் பக்தேஷ்வரா
நடனம் புரியும் நடராஜா
முக்கண்ணப்பனே திரினேத்ரா
ஈஷ்வரா ஈஷ்வரா
ஈஷ்வரா ஈஷ்வரா
0 comments:
Post a Comment