கடந்த ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் நாள் நம் தேசிய சுதந்திர தினத்தன்று விஷ்ணு சஹஸ்ர நாமம் மனனம் செய்வது என முடிவு செய்து அப்படி விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுவதும் மனனம் செய்யும் வரை என் வலை தளங்கள் எதிலும் புதிய பதிவுகள் இடுவதில்லை என்றும் முடிவு செய்தேன். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு சில நாட்கள் முன்னதாக இறைவனின் பிரம்ம நிலைப் பற்றிய இந்த பாடலை ஸ்ரீ கிருஷ்ணர் அருளால் இயற்றி பாடி ஒலிப்பதிவு செய்து வைத்தேன். பின்னர் ஒரு வாரம் முன்னதாக விஷ்ணு சஹஸ்ர நாமம் முழுவதும் மனனம் செய்து முடித்து மீண்டும் வலைதளங்களில் இயங்க ஆரம்பித்தேன். அதை தொடர்ந்து பரப் பிரம்மத்தை பற்றிய இந்த பாடலுக்கு காணொளி அமைத்து அன்பர்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஓம் ஸ்ரீ சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமன் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மனே நமஹ!
0 comments:
Post a Comment