ரோம ரோமமு ராம நாமமே!
ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.- நம்மாழ்வார்
சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்
எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்
ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ராம பாத காயத்ரி
ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்
வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே
கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே
ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே
நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே
ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை
ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே
-கம்பர்
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்
நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்
போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்
நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்
ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்
காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்
திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி
டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே
சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?
ராம்ராம்
அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்
கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்
இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!
சுவாமி சின்மயானந்தர்

என் கீதாச்சார்யார்
நன்றியுரை
சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது
அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது
இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது
மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது
கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது
அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ
அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!
சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!
Tuesday, August 5, 2014
ராம நாம ஞானம் - 2
பரபிரம்மமது பிரம்மமது ஆகலாம் ஆகலாம்
மாயையதை மாயையதை ஆளலாம் ஆளலாம்
அன்னையாக்கி பிள்ளையாகி மாயையதை ஆளலாம்
ராமராம ராமராம ராமராமவென்று கூறிட (26)
பிரம்மமதை அறியலாம் மாயையதை அறியலாம்
சிவனாரின் திருமாலின் குணங்களைப் புரியலாம்
நன்மையதை ஞானமதை அறியலாம் அடையலாம்
ராமராம ராமராம ராமராமவென்று கூறிட (27)
ஜாதகத்தின் தோஷங்களைப் போக்கலாம் போக்கலாம்
சேர்க்காத புண்ணியத்தை சேர்க்கலாம் சேர்க்கலாம்
நம்பியோரை கைவிடாது காக்கலாம் காக்கலாம்
ராமராம ராமராம ராமராமவென்று கூறிட (28)
காமமது குற்றமில்லை என்றுஎன்று உணருவான்
உரிமையற்ற பெண்தொடுதல் குற்றமென்று உணருவான்
மனைவியிடம் காமமதை பாலாகப் பருகுவான்
ராமராம ராமராம ராமராமவென்று கூறுவோன் (29)
தாயார் நிலைப்பரோ? தந்தையார் நிலைப்பரோ?
உறவுகள் பற்பலரும் நிலைப்பரோ? நிலைப்பரோ?
அவர்அவர் அவர்விதிவழியே சென்றபின் சென்றபின்
உற்றத்துணை ஆகிநிற்கும் ராம ராமராம நாமமே! (30)
அழகுஅழகுஅழகு என்று தம்மழகில் மகிழும் பெண்களே
நான்முகனார் செயலுக்கு பெருமிதம்நீர் கொள்வதோ?
சதைத்தொங்கி தோள்சுருங்கி பல்கொட்டும் நாளிலே
உங்கள் அழகு உங்களுக்கு ஆனந்தம் அளிக்குமோ? (31)
இளமையிருக்கும்போதிலே உம்மழகைப் போற்றும் ஆணினம்
முதுமைவந்தபின்னரும் உம்மழகைப் போற்றி நிற்குமோ?
உள்ளழகை காணுகின்ற நாயகன் யாரென்று
ராமராம ராமவென்று கூறிக்கூறித் தேருவீர்! (32)
சிம்ரன் இடுப்பின்புகழ் இல்லாமல் போனது
ரம்பா தொடையின்புகழ் தொலைந்தே போனது
நஸ்ரியா அழகின்புகழ் நாள்கடந்து நிற்குமோ?
ராமராம ராம ராமவென்று கூறிக்கூறி தேருவீர்! (33)
இவர்மீது கொஞ்சநாள் அவர்மீது கொஞ்சநாள் கொள்வதுயேன் மோகமே?
மோகமது முதுமையில் களைந்து விடும் மேகமே!
ராமர் கிருஷ்ணர் பக்தராய் தேடுவீர் பேரின்பமே
இளமையிலும் முதுமையிலும் நிலைக்கும் பேரின்பமே! (34)
காந்தி ஓடவில்லை ஒழியவில்லை காட்டுக்குள் பதுங்கவில்லை
காக்கக் கிளம்பிய மக்களை கவசமாக கொள்ளவில்லை
மார்பிலே குண்டேற்று மடிந்த மாவீரனே
ராமராம ராமவென்று கூறிவென்ற வீரனே! (35)
நன்மையது உருவெடுத்து ராமபிரான் ஆனது
அன்புமது உருவெடுத்து ஏசுபிரான் ஆனது
நன்மையது தீமையொடு பகைமைக்கொண்டு தீர்த்தது
அன்புமது அனைவருக்கும் அன்புமழை பெய்தது (36)
புரட்சிபுரட்சி புரட்சியென்று புரட்சிபேசும் வீரரே
தம்மிச்சைக்கெதிர் புரட்சிவிட வேறுபுரட்சி உள்ளதோ?
ஏகாதசி பசித்துப்பார் சிவசாமம் விழித்துப்பார்
ராமராம ராமராம ராமராமவென்று கூறியே! (37)
முரட்டுத்தனம் வீரமல்ல என்பதுப் புரிந்திடும்
காமமது காதலல்ல என்பதும் புரிந்திடும்
வெல்வதல்ல பெருமிதம் வெல்லவைத்தல் பெருமிதம்
என்பதைப் புரியவைக்கும் ராம ராமராமநாமமே (38)
பார்த்தசாரதியின் தேரினை பாதுகாத்த மந்திரம்
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவன் காட்டும் மந்திரம்
கிருஷ்ணரின் சாரமான ராமராமரின் சாரமான
ராமராம ராமராம ராம ராமவென்ற நாமமே (39)
தேர்தலென்ற பெயரிலே பொருளைவாரி இரைக்கிறீர்
நாட்டுக்கு யார் நல்லதென்று கூடிக்கூடி பேசுறீர்
ஊர்க் கூடித் தேரிழுத்தல் நாட்டுக்கு நல்லதென்று
ராமராம ராம ராமவென்று கூறிக்கூறித் தேருவீர்! (40)
காசுகாசுகாசு என்று காசுசேர்க்கும் மூடரே
காசுசேர்க்கும் ஆவலில் பாவம்கூட சேர்க்கிறீர்
காசும்வந்து காக்குமோ பாவம் வந்தழிக்கையில்?
ராமராம ராம ராமவென்று கூறிக்கூறித் தேருவீர் (41)
புண்ணியத்தை சேர்ப்பதே வேலையான நாட்டினில்
புண்ணியத்தை துறந்துவிட்டு பொருளனைத்தும் சேர்க்கிறீர்
புண்ணியங்கள் தீர்ந்தபின் சேர்த்தப்பொருள் நிற்குமோ?
ராமராம ராம ராமவென்று கூறிக்கூறித் தேருவீர்! (42)
காணுகின்ற பொருளிலெல்லாம் பரப்பிரம்மம் உள்ளது
காணுகின்ற பொருளிலெல்லாம் மாயையதும் உள்ளது
பரப்ரம்மமதும் மாயையதும் உண்மையென் றுணர்ந்திட
ராமராம ராமராம ராமராமவென்று கூறுவீர் (43)
பரப்பிரம்மம் ஒன்றதே அத்தனையும் ஆனது
மாயையது அத்தனைக்கும் குணங்களைக் கொடுத்தது
ஒன்றே பலதென்றும் பலதும் ஒன்றென்றும்
ராமராம ராமவென்று கூறிக்கூறித் தேருவீர் (44)
சத்துவக் குணப்பிரம்மம் விஷ்ணுபிரான் ஆனது
தாமசக் குணப்பிரம்மம் சிவபெருமான் ஆனது
அரியாரும் அரனாரும் ஒன்றென் றுணர்ந்திட
ராமராம ராமராம ராமராமவென்று கூறுவீர் (45)
உண்மையும் நியாயமும் கசந்திடா கசந்திடா
உண்மையில் நன்மையில் பிடிப்பதும் தளர்ந்திடா
உண்மையை மறைத்திடும் மயக்கங்கள் வளர்ந்திடா
ராமராம ராமராம ராமராமவென்றுக் கூறிட (46)
இறுதியில் அழிந்திடும் உடலடா உடலடா
இருவினையால் இழுபடும் உயிரடா உயிரடா
ஆசையால் அலைந்திடும் மனமடா மனமடா
அத்தனைக்கும் நன்மைசெய்யும் ராம ராமராமநாமமே (47)
மகிழ்ந்திருக்கும் மனதினில் ஆசை வந்து அண்டிடா
மகிழ்ந்திருக்கும் உடலினில் நோய்கள் வந்து அண்டிடா
மகிழ்ச்சியயைக் கொடுத்திடும் ஞானம்ஞானம் ஞானமே
ஞானத்தைக் கொடுத்திடும் ராம ராமராமநாமமே! (48)
மகிழ்பவனை தேடியே யோகம் ஞானம் வந்திடும்
மகிழ்பவனை தேடியே அதிர்ஷ்டம் செல்வம் வந்திடும்
ராமபக்தனைத் தேடியே மகிழ்ச்சியது வந்திடும்
ராமபக்தனுக்கு உற்றத்தோழன் ராம ராமராம நாமமே (49)
நெல்லிக்கனிகள் தந்துள்ளேன் சுவைத்துக் கொஞ்சம் பாரடா
ராம ராமராமவென்றுக் கூறி கனிந்த ஞானக்கனியடா
ராம ராமராமவென்று கூறி கனிந்துநான் கூறினேன்
கனிவதற்கு ராமராம ராம ராமவென்றுக் கூறினேன் (50)
ஸ்ரீராமராமி ராமபுண்யராமானுஜராமதூத சங்குசக்ரநம்மாழ்வார் ஜெயம்!
ஸ்ரீராமராமி ராமபுண்யராமானுஜராமதூத சங்குசக்ரநம்மாழ்வார் ஜெயம்!
ஸ்ரீராமராமி ராமபுண்யராமானுஜராமதூத சங்குசக்ரநம்மாழ்வார் ஜெயம்!
ஸ்ரீராமராமி ராமபுண்யராமானுஜராமதூத சங்குசக்ரநம்மாழ்வார் ஜெயம்!
Posted by ramesh sadasivam at 11:41 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment