கொழுகொழுவென்று இருந்துகொண்டு
வெண்ணை திண்ணும் கண்ணன்
குண்டு குண்டாய் இருந்துகொண்டு
மனதை கவரும் கண்ணன்
அழகுக் குட்டியாக இருந்து கொண்டு
மனதை அள்ளும் கண்ணன்
வண்ண வண்ண ஆடை சூடி
பொன்னாய் மின்னும் கண்ணன்
ஆப்பிள் கன்னத்தில் குழி விழவும்
அழகாய் சிரிக்கும் கண்ணன்
கன்னத்தை கொஞ்சம் கடித்து பார்க்க
ஆசை தூண்டும் கண்ணன்
காந்தக் கரு விழிகளால்
மிரண்டு பார்க்கும் கண்ணன்
கருத்த சுருள் கேசத்தை
தோளில் புரளவிடும் கண்ணன்
குட்டியாக தொப்பை போட்டு
வைத்திருக்கும் கண்ணன்
மெத்தை போன்ற தொடைகளில்
தலை சாயச் சொல்லும் கண்ணன்
பிஞ்சு பிஞ்சு விரல்கள் கொண்டு
கொஞ்சச் சொல்லும் கண்ணன்
பஞ்சு பஞ்சு பாதம் வைத்து
நடைபயிலும் கண்ணன்
பொன்னான நகைகள் சூடும்
கரும் வைர கண்ணன்
பட்டாடையால் இடைமறைக்கும்
இடையர் குல கண்ணன்
இதயத்தை கரு அறையாக்கி
ஒரு தாயைப் போல் தாங்கினேன்
குழந்தையான அவனை தூக்கி
மடியில் வைக்க ஏங்கினேன்
கண்ணனை குளிக்க வைத்து
அலங்கரிக்க ஒருநாளும் வாராதோ?
கண்ணனுக்குத் தாயாகி சோறூட்டும்
நல் திருவாய்ப்பை தாராதோ?
உனை பார்த்துக் கொண்டிருந்தாலே
பல பாரம் குறையுதடா!
நிலவனைய உன் முகம் நினைத்தால்
என் பாவ இருள் கரையுதடா!
மலர் கொண்டு அர்ச்சித்தால்
தாமதம் ஆகுமென்று
முத்தத்தால் அர்ச்சித்தேன்
கண்ணா ஏற்றருள்வாய்
அழுக்கான நெஞ்சென்றாலும்
நெஞ்செல்லாம் நஞ்சென்றாலும்
அடிபணிந்து அழைக்கின்றேன்
மணிவண்ணா வந்தருள்வாய்
அழகிய முகமுடைய
அமுதனே வந்தருள்வாய்
குழந்தையாய் காட்சி தரும்
அழகனே வந்தருள்வாய்
கெஞ்சிக் கேட்கின்றேன்
கொஞ்சிடவே வந்திடுவாய்
நெஞ்சோடு அணைத்திடவே
கொஞ்சமேனும் வந்திடுவாய்
தஞ்சமென நிற்பவனை
தவிக்க வைக்காமல் வந்திடுவாய்
தளர் நடை போட்டபடி
தயாளனே வந்திடுவாய்
வெண்ணை தந்திடுவேன்
இனிப்புகளும் தந்திடுவேன்
என் மடியில் நீ அமர
நான் எதுவும் செய்திடுவேன்
கண்ணா வந்தருள்வாய்
மணிவண்ணா வந்தருள்வாய்
மாயகலை கிருஷ்ணா வந்தருள்வாய்
ஆயர்குல கிருஷ்ணா வந்தருள்வாய்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா!
ராம ராம ராம ராம ராம ராம ராமா!
4 comments:
கட்டித் தங்கக் குட்டிக் கண்ணன் ச்சோ ச்வீட் :) நீங்கள் அவனைக் கொஞ்சிய விதமும் ச்சோ ச்வீட்!
:) ஹ்ம்ம்ம்... நன்றி கவிநயா!
கண்ணாளனை என்
கண்ணான கண்ணனை
நினைந்துருகும் என்
இனிய நண்பனை
எண்ணியெண்ணி
நெஞ்சமது நெகிழுதே!
தொடருக..தடம் மாறாமல்
தொடருக...
வடமிழுக்கத் தொடருகிறோம்
தொடர்ந்து பயணிப்போம்
வாடா மலராய்
வாசம் சூட்டுவோம் எம்
கண்ணனைத் துதியால்
துதித்து!
வாழ்க! வளர்க!
வழ்வது செழிக்க
வாழ்த்துவான் கண்ணன்!
மிக்க நன்றி அட்சயா... நிச்சயம் பயணிப்போம் நம் கண்ணனோடு... :)
Post a Comment