தாமரைக் கண்ணா தாமரைக் கண்ணா
தாமரைக் கண்ணா கண் திறவாய்
பாற்கடல் மேல் பாம்பணை மேல்
கண்களை மூடி துயில்பவனே
கண் திறவாய் கண் திறவாய்
தாமரைக் கண்ணா கண் திறவாய்
ஞானம் தரும் உன் பாத மலர்
சீதேவியின் மடிமேல் துயில்வது போல்
அரவணை மேல் துயில்பவனே
அறிதுயில் கொள்வோய் கண்திறவாய்
கண் திறவாய் கண் திறவாய்
தாமரைக் கண்ணா கண் திறவாய்
தாமரையும் மலர்வது போல்
தாமரைக் கண்ணா இமை திறவாய்
ஆதியில் உலகேழ் உமிழ்ந்தவனே
அந்தத்தில் அனைத்தும் விழுங்குபவா
நாபி மலர்மேல் நான்முகனை
படைத்தல் நடத்திட படைத்தவனே
மார்பில் கௌத்துப மணி விளங்க
பொன் மகுடமுன் தலைமேல் அதுவிளங்க
சுரர்கள் சூழ்ந்துன்னை துதி செய்ய
துயில்பவனே துயில்பவனே
தாமரைக் கண்ணா கண்திறவாய்
கட்கம் என்னும் வாளுடையாய்
நீல வண்ண தோளுடையாய்
சங்கு சக்கரம் படையுடையாய்
கேள்விகள் அனைத்துக்கும் விடையுடையாய்
புன்னகை செய்ய இதழ் திறவாய்
தாமரைக் கண்களின் இமை திறவாய்
தோள்மேல் புரளும் இருள்கேசா
திருமகள் விரும்பும் சீனிவாசா
கண்திறவாய் கண்திறவாய்
தாமரைக் கண்ணா கண்திறவாய்
அரியே விஷ்ணுவே கண் திறவாய்
ஆனந்த சயனனே கண் திறவாய்
சீதேவி பூதேவி மணவாளா கண் திறவாய்
மண்மேலே சீராமனாய் பிறந்தவாகண் திறவாய்
கண் திறவாய் கண் திறவாய்
தாமரைக் கண்ணா கண் திறவாய்
தாமரையும் மலர்வது போல்
தாமரைக் கண்ணா இமை திறவாய்
பாற்கடல் பாற்கடல் கடைந்தவனே
அமுதம் தேவர்க்கு அளித்தவனே
திருவடியால் உலகம் அளந்தவனே
இரணியன் மார்வம் பிளந்தவனே
நீரினுள் தாழ்ந்த பூமியதை
கேழலாய் சுமந்து உயர்த்தியவா
மீனாய் ஆமையாய் பிறந்தவனே
ஈரேழ் உலகிலும் சிறந்தவனே
கண் திறவாய் கண் திறவாய்
தாமரைக் கண்ணா கண் திறவாய்
தாமரையும் மலர்வது போல்
தாமரைக் கண்ணா கண் திறவாய்
சத்தியம் காத்தாய் சீராமனாய்
தர்மம் காத்தாய் சீகிருட்ணனாய்
நன்மை காடினாய் சீராமனாய்
ஞானம் ஊட்டினாய் சீகிருட்ணனாய்
மச்சா கூர்மா பூவராகா நரசிம்மா நரசிம்மா
வாமனா ராமா சீராமா பலராமா சீகிருஷ்ணா
0 comments:
Post a Comment