சிவபெருமானே சிவபெருமானே
உங்கள் பாதம் போற்றுகிறேன்
அண்டம் ஆளும் தலைவன் நீர்
நரகம் தாண்ட உதவிடுவீர்
பிறையை சடையில் தரித்தவரே
அமுதென அன்பைப் பொழிந்திடுவீர்
கற்பூர நிறத்தில் ஒளிர்பவரே
சடைமுடி மகுடமாய் அணிந்தவரே
என் ஏழ்மை வறுமை எரித்திடுவீர்
என் துன்பம் துயரம் தகித்துடுவீர்
சிவபெருமானே சிவபெருமானே
உங்கள் பாதம் போற்றுகிறேன்
சக்தி கௌரிக்கு பிடித்தவரே
இருளரசின் பிறையை தரித்தவரே
காலத்தின் இறுதியாய் இருப்பவரே
அரவரசை அணியாய் அணிபவரே
கங்கையை தலையில் கொண்டீர் நீர்
இபவரசை அழித்தீர் ஒழித்தீர் நீர்
என் ஏழ்மை வறுமை எரித்திடுவீர்
என் துன்பம் துயரம் தகித்துடுவீர்
சிவபெருமானே சிவபெருமானே
உங்கள் பாதம் போற்றுகிறேன்
பக்தர்கள் தமக்கு இனியவரே
நோய்தரும் துன்பம் தீர்ப்பவரே
உக்கிர குணத்துடன் திகழ்பவரே
துயர்பிறவிக் கடந்திட உதவிடுவீர்
ஒளியின் வடிவாய் திகழ்பவரே
நடராசராய் நடனம் புரிபவரே
என் ஏழ்மை வறுமை எரித்திடுவீர்
என் துன்பம் துயரம் தகித்திடுவீர்
சிவபெருமானே சிவபெருமானே
உங்கள் பாதம் போற்றுகிறேன்
வெளியை உடையாய் கொண்டவரே
மயான சாம்பல் தரிப்பவரே
நெற்றியில் கண்ணொன்று கொண்டவரே
காதிரண்டிலும் தோடுகள் அணிந்தவரே
சலங்கைகள் கால்களில் கலகலக்க
திருநடனம் புரியும் சடாதாரி
என் ஏழ்மை வறுமை எரித்திடுவீர்
என் துன்பம் துயரம் தகித்துடுவீர்
சிவபெருமானே சிவபெருமானே
உங்கள் பாதம் போற்றுகிறேன்
ஓர் ஐந்து முகங்களைக் கொண்டவரே
நாகராசர் நகையாகும் கழுத்துடையீர்
பொன்னிற ஆடைகள் தரித்தவரே
மூவுலகையும் அணியாய் அணிபவரே
மகிழ்ந்தே வரங்கள் அளிப்பவரே
தம குணத்துக்கு ஆனந்த அதிபதியே
என் ஏழ்மை வறுமை எரித்திடுவீர்
என் துன்பம் துயரம் தகித்துடுவீர்
சிவபெருமானே சிவபெருமானே
உங்கள் பாதம் போற்றுகிறேன்
கௌரிக்கு உலகம் ஆனவரே
ஆளுமை செய்வோரில் பெரியவரே
சரணடைந்தோருக்கு வரமருள் கற்பகமே
கம்பீர தோற்றம் கொண்டவரே
அண்டத்தில் அனைத்தும் ஆனவரே
அண்டத்தின் அதிபரும் ஆனவரே
என் ஏழ்மை வறுமை எரித்திடுவீர்
என் துன்பம் துயரம் தகித்துடுவீர்
சிவபெருமானே சிவபெருமானே
உங்கள் பாதம் போற்றுகிறேன்
சூரிய தேவனின் அன்புடையீர்
பிறவிக் கடலை கடக்கவைப்பீர்
காலனை காலால் உதைத்தவரே
மலராசன நான்முகர் தொழும் இறைவா
முக்கண்ணொடு அங்கங்கள் அழகாக
அமைந்துள்ள மெய்யா சிவநாமா
என் ஏழ்மை வறுமை எரித்திடுவீர்
என் துன்பம் துயரம் தகித்துடுவீர்
சிவபெருமானே சிவபெருமானே
உங்கள் பாதம் போற்றுகிறேன்
ராமரின் உள்ளத்தில் இடம்பிடித்தீர்
ராமரை உள்ளத்தில் உயர்த்திவைத்தீர்
சத்தத்தில் உறையும் சக்திநாதா
நரகவாழ்வை அழித்திடும் பெரும்புனிதா
தேவர்கள் துதிசெய்யும் மகாதேவா
புண்ணியம் செய்திட அருள்புரிவீர்
என் ஏழ்மை வறுமை எரித்திடுவீர்
என் துன்பம் துயரம் தகித்துடுவீர்
சிவபெருமானே சிவபெருமானே
உங்கள் பாதம் போற்றுகிறேன்
முக்தியை அளிக்கும் ஈச்வரரே
கணபதிக்கு அருளும் அன்புடையீர்
கீதத்தில் உள்ளம் மகிழ்பவரே
நந்தியார் முதுகில் திகழ்பவரே
யானை தோலினை உரித்தணிந்தீர்
மேற்சொன்ன புகழுக்கு உரியவர்நீர்
என் ஏழ்மை வறுமை எரித்திடுவீர்
என் துன்பம் துயரம் தகித்துடுவீர்
வசிஷ்டர் இயற்றிய இத்துதியை
உரைத்தே சிவனை துதிப்பவரின்
அனைத்து ஏழ்மையும் அழிந்திடுமே
அனைத்து செல்வமும் விரைந்திடுமே
மனைவி மக்கள் புடைசூழ
மகிழ்ந்தே வாழ்வர் தரணியிலே
தினமும் மும்முறை இதை சொன்னால்
சுவர்க்கம் புகவும் இறை அருளும்
0 comments:
Post a Comment