நீந்திநீந்திநீந்திவந்த மச்சமச்சமூர்த்தியே
தவழ்ந்துதவழ்ந்துதவழ்ந்துவந்த கூர்மகூர்மமூர்த்தியே
கிளர்ந்தெழுந்துமேலெழுந்த கேழல்கேழல்மூர்த்தியே
கோபம்கொண்டுதூணுடைத்த சிம்மசிம்மமூர்த்தியே
குள்ளக்கள்ளப்பிள்ளையாக பிச்சைக்கேட்டவாமனா
நெட்டைநெட்டைநெட்டையாகி வானளந்தவிக்ரமா
வீரம்கொண்டுவெற்றிக்கண்ட பரசுராமமூர்த்தியே
ஈரம்கொண்டுஉள்ளம்வெல்லும் அரசுராமமூர்த்தியே
கலப்பைகதாயுதம்தூக்கும் பலராமமூர்த்தியே
கீதைதந்துஞானம்தந்த ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியே
மௌனம்காத்துஅமைதியான புத்தபுத்தமூர்த்தியே
அண்டம்நிறைஆகாயம் ஹயக்ரீவமூர்த்தியே
ஐந்தும்மூன்றும்ஒன்றுமான நாராயணமூர்த்தியே
அண்டமெல்லாம்நிறைந்திருக்கும் ஸ்ரீவிஷ்ணுமூர்த்தியே
அண்டெமெல்லாம்நன்மையான ஸ்ரீராமமூர்த்தியே
ஸ்ரீராமப்புண்ணியமாம் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியே
ஆதிஷேஷன்கருடாழ்வார் ஏற்றுகின்றமூர்த்தியே
ஆஞ்சநேயர்ஆஞ்சநேயர் போற்றுகின்றமூர்த்தியே
ஆழ்வார்கள்பன்னிருவர் பாடிவைத்தமூர்த்தியே
வேதங்கள்போற்றுகின்ற பரப்பிரம்மமூர்த்தியே
ஸ்ரீவிஷ்ணுபஞ்சரத்னகீதம் விஷ்ணுஞானசோபிதம்
ஸ்ரீவிஷ்ணுபஞ்சரத்னகீதம் விஷ்ணுநாமசேவிதம்
ஸ்ரீவிஷ்ணுபஞ்சரத்னகீதம் விஷ்ணுபுண்யசோபிதம்
ஸ்ரீவிஷ்ணுபஞ்சரத்னகீதம் விஷ்ணுபாதசேவிதம்
----------------
மேத்தா நகர் பிள்ளையார்.
இந்த முறை
அக்ஷய திரிதியைக்கு மறுநாள் சதுர்த்தி விரதம் முடியும் தறுவாயில் இந்த
மஹாவிஷ்ணு பஞ்சரத்ன கீதத்தை இயற்றினேன். இதை இயற்றி முடித்த பின்னரே
சதுர்த்தி விரதத்தை முடித்தேன். ஆகையால் மஹாவிஷ்ணு பஞ்சரத்ன கீதமும்
பிள்ளையார் அவர் தாய் மாமாவுக்கு என் மூலமாக கொடுத்த அன்பளிப்பே ஆகும்.
புரியாதவர்கள் இங்கே சொடுக்கவும்.
இளையராஜா ராமாயணம்
-----------
மேலும் அன்பர்களுக்கு ஓர் நற்செய்தி. நான் இளையராஜா ராமாயணம் என்ற ஒரு புதிய ராமாயணத்தை இயற்ற முடிவு செய்துள்ளேன்.அது என்னவென்றால் இசைஞானி இளையராஜாவின் பாடல்களின் மெட்டுகளை வைத்துக் கொண்டு அதன் வாயிலாக பாட்டாக ராமாயணம் முழுவதும் சொல்வது. அக்ஷய திரிதியை நன்னாளன்றே இரண்டு பாடல்கள் எழுதிவிட்டேன். ஆகையால் இந்த இளையராஜா ராமாயணம் என்பது மிகப் பெரிய வெற்றி பெறும் என்பதில் அருகம்புல்லின் நுனியளவும் ஐயம் இல்லை. எல்லாம் ஸ்ரீராமரின் அருளே. எல்லாம் ஸ்ரீகிருஷ்ணரின் இயக்கமே.
இளையராஜா ராமாயணம் எவ்வித தடைகளுமின்றி இனிதே நிறைவேற விக்னங்களின் அரசனாம் விக்னேஷ்வரனாம் அன்னை உமையவளின் செல்லப் பிள்ளையாம் நமெக்கெல்லாம் முதல் அண்ணனாம் நம் பிள்ளையாரப்பனை வேண்டுகிறேன்.
அவர் தம்பி முருகப் புலவரையும் வேண்டுகிறேன்.
திங்கள் சூடிய தேவனாம் சிவபெருமானையும் வேண்டுகிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக என் ஆசான் ஸ்ரீஹயக்ரீவரின் பாதம் துதித்துப் போற்றுகிறேன்.
கலைமகள் அலைமகள் மலைமகள்
துணை நிற்க வேண்டுகிறேன்!
------------------------
கத கேளு கத கேளு
ஸ்ரீராமர் கத கேளு
கத கேளு கத கேளு
ஸ்ரீராமர் கத கேளு
சத்ருக்ன பரத லக்ஷ்ம ராம
கதய நல்லா கேளு
நாலுடம்பில் ஓரே உயிர் வாழ்ந்த கத
கேளு......
:)
Lend your ears!
Lend your ears!
For Shri Rama Lend your ears!
Lend your ears to hear the story of My Lord Shri Rama!
You will be captivated by the enlightening Drama!!
இளையராஜா ராமாயணம் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலுமே இயற்றுகிறேன்!
Lend your ears to hear the story of My Lord Shri Rama!
You will be captivated by the enlightening Drama!!
இளையராஜா ராமாயணம் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலுமே இயற்றுகிறேன்!
ஜெய்ஸ்ரீராம்!!
3 comments:
மஹாவிஷ்ணு பஞ்சரத்ன கீதமும் பிள்ளையார் அவர் தாய் மாமாவுக்கு கொடுத்த அன்பளிப்பே அபாரம்.. பாராட்டுக்கள்..
நன்றி மேடம்!
இளையராஜா பாடல்களின் ராகம் வழி ராமாயணம் ...அருமை...சார்...மேலும்...
Post a Comment