ராம நாமம் பாடுவோம் ராம நாமம் பாடுவோம்
ராம நாமம் பாடி பாடி இன்ப நிலை தேடுவோம்
ராம நாமம் பாடி பாடி இன்ப நிலை தேடுவோம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
ராம நாமம் பாடுவோம் ராம நாமம் பாடுவோம்
கௌசல்யை பெற்றெடுத்த பிள்ளை நாமம் பாடுவோம்
தந்தை சொல் காத்து நின்ற தனயன் புகழ் பாடுவோம்
லச்சுமணர் சேவை செய்த அண்ணன் புகழ் பாடுவோம்
பரதுனுக்கு மகுடம் தந்த மன்னன் புகழ் பாடுவோம்
ராம நாமம் பாடுவோம் ராம நாமம் பாடுவோம்
ராம நாமம் பாடி பாடி துன்பம் அதை போக்குவோம்
ராம நாமம் பாடி பாடி துன்பம் அதை போக்குவோம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
ராம நாமம் பாடுவோம் ராம நாமம் பாடுவோம்
அன்னை சீதை காதல் கொண்ட அழகன் புகழ் பாடுவோம்
அணிலுக்கும் அன்பு செய்த அனபன் புகழ் பாடுவோம்
எச்சிலான விருந்தை ஏற்ற எளியன் புகழ் பாடுவோம்
ஆஞ்சநேயர் நெஞ்சில் வாழும் இறைவன் புகழ் பாடுவோம்
ராம நாமம் பாடுவோம் ராம நாமம் பாடுவோம்
ராம நாமம் பாடி பாடி ஞானம் அதை தேடுவோம்
ராம நாமம் பாடி பாடி ஞானம் அதை தேடுவோம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
ராம நாமம் பாடுவோம் ராம நாமம் பாடுவோம்
வேடுவனின் நட்பை ஏற்ற நண்பன் புகழ் பாடுவோம்
வானரத்தின் துன்பம் தீர்த்த தலைவன் புகழ் பாடுவோம்
கருணையுடன் போர் புரிந்த கடவுள் புகழ் பாடுவோம்
காந்தி மகான் கற்றுணர்ந்த அறிஞன் புகழ் பாடுவோம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
ராம ஹரே ராம் ராம் ஹரே ராம ஹரே ராம் ராம்
13 comments:
அழகான பாடல். பஜனைக்கு ஏற்றது. ஸ்ரீராமர் படம் கொள்ளை அழகு! நன்றி ரமேஷ்.
nanri kavinaya
இதுவும் ரொம்ப நல்லா இருக்கு ரமேஷ். இதை பாடலியா ? ட்யுன் போட்டு பாடினா நல்லா இருக்குமே
நன்றி.
இதை பாடலாகத் தான் பாடினேன். இன்னும் ஒலிப்பதிவு செய்யவில்லை. யாரோ நல்லெண்ண சிந்தனையாளர் வைரஸ் கொண்டு கணினியை தாக்கிவிட்டார். சில தொழில் நுட்ப பிரச்சனைகள் உள்ளன. கூடிய விரைவில் அதை வலையேற்றுகிறேன்.
பி.கு: தாங்கள் பலாக்கனி போன்றவர். தங்கள் நட்பை மதிக்கிறேன். நன்றி. :)
//தாங்கள் பலாக்கனி போன்றவர்.//
வெளியே கரடு முரடாகவும், உள்ளே இனிப்பாகவும் இருக்கிறேன் என்கிறீர்களா ?
என்னே இராமபிரான் பக்தியின் பெருமை! முன் பின் பார்த்திராதவர்களின் குணாதிசயங்களை, நன்கு பழகி தெரிந்து கொண்டதுபோல் பளிச்சென்று காட்டுகிறதே!
நீங்களும், உங்கள் தம்பியும் சிறப்பாக ஆன்மிக வழி நடக்கிறீர்கள். உங்கள் எண்ணம், குறிக்கோள் சிறப்புற ஈடேற எல்லாம் வல்ல இராமபிரானின் துணை என்றும் இருக்க வேண்டுகிறேன். குறிக்கோளும், வழியும், வழித்துணையும் அவனே அல்லவா?
நன்றி ரமேஷ்.
ஆமாம்.பிரார்த்தனைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.
நன்றி நண்பரே.
:)
muni said
போற்றுதலோ தூற்றுதலோ ஸ்ரீ ராமரையே சேரும். :) [அதனால் தாராளமாய் திட்டலாம் நான் தவறாக நினைக்க மாட்டேன்
எழுதியதில் தப்பிருந்தால் அது அடியேனுடையது
எழுதியது பிடித்திருந்தால் அது அவனுடையது... enrallavaa irukka vendum
ஓம் நமோ நாராயணாய
முனி அவர்களே , இது பற்றி பலரும் என்னிடம் கேட்டுவிட்டார்கள். போற்றுகதலும் தூற்றுதலும் ராமரையே சாரும் என்பது என் கொள்கை. இதை அடிப்படையாகக் கொண்டே நான் வாழ்ந்து வருகிறேன்.
//எழுதியதில் தப்பிருந்தால் அது அடியேனுடையது
எழுதியது பிடித்திருந்தால் அது அவனுடையது...//
என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அது உங்கள் கொள்கையாயிருப்பின் நீங்கள் அதை பின்பற்றுங்கள். வாழ்த்துக்கள்.
ஸ்ரீராமனைப் பாடும் தங்களை வணங்கிக் கொள்கிறேன்.
இந்தப் பஜனைப் பாடல் பள்ளியில் படிக்கும் போது பாடி இருக்கிறேன்.. தாங்கள் எழுதிய பாடல் என்று அறிகையில் மகிழ்கிறேன். வளர்க தங்கள் பணி!
ஹனுமந்ராமா அவர்களே வணக்கம். படித்தமைக்கும் பின்னூட்டம் இட்டமைக்கும் மிக்க நன்றி. நீங்கள் பள்ளியில் பாடியது இந்த பாடல் தானா? ஏனெனில் எனக்கு அது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
pls visit http://jaisrisitaram.blogspot.com/
thank u
Can you anyone please sing this songs. I want to know the tune.
Post a Comment