ஷண்முகா ஷண்முகா
ஷண்முகா ஷண்முகா
ஷண்முகா ஷண்முகா
ஷண்முகா ஷண்முகா
சூரனை வதைத்த மாவீரா
மலையொன்றை பிளந்த சக்திவேலா
மயில்வாகனனே முருகோனே
கருடவாகனர் மருகோனே
சிவனார் நெற்றியின் அனலிலன்று
ஓராறு சிசுவாய் தோன்றியவா
கார்த்திகைப் பெண்களின் மடிதனிலே
படுத்துப் பாலது பருகியவா
ஓராறு பாலகர் ஒன்றாக
திரண்ட உருவனே கந்தவேளே
கார்த்திகை பெண்களு முன்தாயே
உமையவள் சக்தியுமுன் தாயே
அமரர்க்காய் அமரம் புரிந்தவனே
அமரர்த் தலைவனின் மருமகனே
தெய்வானைத் திருக்கரம் பிடித்தவனே
வள்ளியின் திருக்கரம் பிடித்தவனே
ஷண்முகா ஷண்முகா
ஷண்முகா ஷண்முகா
ஷண்முகா ஷண்முகா
ஷண்முகா ஷண்முகா
சேவற்கொடியை கொண்டவனே
ஆறுமுகங்கள் கொண்டவனே
பன்னிருவிழிகள் கொண்டவனே
பன்னிருகரங்கள் கொண்டவனே
ஓம்காரப் பொருளை நான்முகனார்
மறந்ததால் அவரைச் சிறைவைத்தாய்
சிவனார் அவர்க்காய் உனைப்பணிய
நான்முக பிரம்மனை விடுவித்தாய்
ஓம்காரப் பொருளுனை சிவன்கேட்க
சீடராய் அவரை வரச்சொன்னவா
சீடராய் சிவனும் உனைப்பணிய
ஓம்கார பொருட்சொன்ன சுவாமிநாதா
வள்ளி தெய்வானை மணவாளா
தொந்திக் கணபதிக் கிளையோனே
சிவனின் சக்தியின் சிறுபாலா
பெருமாள் திருமால் மருகோனே
சூரனை வதைத்த மாவீரா
மலையொன்றை பிளந்த சக்திவேலா
மயில்வாகனனே முருகோனே
கருடவாகனர் மருகோனே
சேவற்கொடியை கொண்டவனே
ஆறுமுகங்கள் கொண்டவனே
பன்னிருவிழிகள் கொண்டவனே
பன்னிருகரங்கள் கொண்டவனே
0 comments:
Post a Comment